Thursday, 13 March 2025

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும் வாழ்க்கையை சிதைப்பதாக அமையும் இப் பிரச்சினைகள் மாணவர்களினுடைய கல்வியையும் பாதிக்கும். அத்தோடு ஒருவரினுடைய சமூக அந்தஸ்தை விளக்கச் செய்வதோடு வாழ்க்கை பயணத்தையும் மாற்றி அமைப்பதாகவும் பிரச்சனைகள் அமையக்கூடும்.


 கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகள்.

  • கொடுமைப்படுத்தல் (Bullying)
  • போதைப் பொருள் துஷ்பிரயோகம்            (Druk abuse)
  • பாலியல் துன்புறுத்தல்கள்                      (Sexual Harassment)
  • வகுப்புப் பாகுபாடு  (Class Discrimination)
  • வன்முறைகள்  (Violence )
  • இன ரீதியான பிரச்சினைகள்                 (Ethnic related problems)

01) கொடுமைப்படுத்தல்

  • உளம் சார் கொடுமை
  • உடல் சார் கொடுமை
  • தொல்லை கொடுத்தல்
  • கட்டாயப்படுத்துதல்
  • ஒதுக்கி வைத்தல்
  • பயத்தை ஏற்படுத்துதல்
  • வலிகளை உண்டாக்குதல்
  • அநீதி இழைத்தல்
  • குரூரம் (கொடுமை)
  • கஷ்டம் கொடுத்தல்
  • தாழ்த்திப் பேசுதல்
  • விமர்சித்தல்
  • தீமை செய்தல்

 கொடுமைப்படுத்துதலை மேற்கொள்வோர்

  • பெற்றோர்
  • சக மாணவர்கள்
  • சகோதரர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • மாணவத் தலைவர்கள்
  • ஆசிரியர்கள்
  • அதிபர்கள்
  • முதலாளிகள்

 கொடுமைப்படுத்துதல் மூலம் ஏற்படும் விளைவுகள்.


  • மன உளைச்சல்
  • உடல் ரீதியான பாதிப்பு
  • கல்வியிலிருந்து இடைவிலகுதல்
  • கொடுமைப்படுத்துவோர் மேல் வெறுப்பு
  • தவறான முடிவுகளை எடுத்தல்
  • வாழ்க்கையில் விரக்தி ஏற்படல்
  • கல்வியில் பின்னடைவு
  • முரண்பாடு ஏற்படும்

தவிர்க்கும் வழிமுறைகள்


  • இனங்கண்டு வழிகாட்டல் ஆலோசனை  வழங்கல்.
  • சட்ட விதிமுறைகளை விதித்தல்.
  • வகுப்பைறைக்கு ஆசிரியர் உரிய நேரத்திற்கு வருதல்.
  • புரிந்துணர்வை அதிகரிக்க வழிகளை ஏற்படுத்தல். (குடும்பத்தில், சக மாணவர்களுக்கு இடையில்....)
  • விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
  • விழுமியக் கல்வியை வழங்கல்.


02) போதைப் பொருள்    துஷ்பிரயோகம்


  • ஒரு நபரை போதைப் பொருள் பாவனைக்கு தூண்டுதல்.
  • போதைப் பொருளை பலவந்தமாக வழங்கல்.
  • போதைப் பொருளை பாவிக்காதோரை ஒதுக்குத்தல்.
  • போதைப் பொருளை பாவிக்காதோரை சேர்த்துக் கொள்ளாமை.                      (ஒதுக்கி வைத்தல்)
  • போதைப் பொருள் பற்றிய தவறான அறிவு வழங்கல். 
      Ex : போதைப் பொருள் உடற்சக்தியை
              வழங்கும் என கூறல்.


போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை     மேற்கொள்வோர்.

  • குடும்ப உறுப்பினர்கள்
  • சக மாணவர்கள்
  • சிரேஷ்டமானவர்கள்
  • அயலவர்கள்
  • புதிதாக அறிமுகமாகவோர்
  • விஷமிகள் 

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள்

  • நோய்கள் (புற்றுநோய், அங்க இழப்பு)
  • கல்வி பாதிப்பு
  • ஒதுக்கி வைக்கப்படல் (சமூகம், குடும்பம், நண்பர்களால் ஒதுக்கப்படுவார்கள்)
  • தவறான செயல்களில் ஈடுபடல். (குற்றச் செயல்கள் : களவு, கொலை)
  •  மனநிலை பாதிக்கப்படல்
  •  உடல் வலிமை இழத்தல்
  •  மூளையின் செயற்பாடு பாதிக்கப்படல்
  •  நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்
  •  குற்றச் செயல்களில் ஈடுபடல்
  •  உணர்வுகளை இழத்தல்
  •  இலகுவாக நோய் தொற்றுக்கு உள்ளாதல்

தவிர்க்கும் வழிமுறைகள்
  •  சட்டரீதியாக தடுத்தல்
  • விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (மாணவர், பெற்றோர்)
  •  மருத்துவ உதவியை பெற்றுக் கொடுத்தல்
  •  சிறுவர் புனருத்தாரண நிலையங்களின் உதவியை பெற்றுக் கொடுத்தல்
  •  விழுமிய பண்புகளை புகட்டுதல்


03) பாலியல் துன்புறுத்தல்

  • பாலியல் ரீதியில் நோக்குதல்
  • தவறான முறையில் ஸ்பரிசம் செய்தல்
  • பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுதல்.
  • பாலியல் உணர்வை தூண்டும் வகையிலான படங்களை காண்பித்தல்.

பாலியல் துன்புறுத்தல் ஏற்படக் கூடிய இடங்கள்

  • குடும்பம்
  • பாடசாலை
  • பயணங்களின் போது
  • வணக்கஸ்தலங்களில்

ஏற்படுத்தக் கூடிய நபர்கள்

  • குடும்ப உறுப்பினர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • சக பயணிகள்
  • சக நண்பர்கள்
  • ஆசிரியர்கள்

விளைவுகள்
  • தற்கொலை
  • உயிரிழப்பு
  • அடுத்தவர் மீதும் தங்கள் மீதும் நம்பிக்கை குறைவு.
  • மன உளைச்சல்
  • சுற்றத்தாரிடம் விலகி இருத்தல்.
  • சக்தி இல்லாமல் இருத்தல்.
  • மனச்சோர்வு
  • அதிகம் கோவப்படுதல்.
  • உண்பதில் ஒழுங்கீனம்.
  • போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாதல்.
  • கல்வியில் நாட்டமின்மை
  • பதட்டம்
  • பயம் காணப்படும்.
  • வழமையான செயற்பாடுகளில் மாற்றம்.
  • திடீர் பயம்
  • வயதுக்கு பொருத்தமற்ற பாலியல் பற்றிய அறிவு.

தவிர்க்கும் வழிமுறைகள்

  • பிள்ளைகளுடன் பழகுபவர்கள் உரிய தகுதி பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தல். (ஆசிரியர், சமூக உறுப்பினர்கள் )
  • பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த உரிமை வழங்கல். (பிள்ளைகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் தன்மையாக, அன்பாக நடந்து கொள்ளல்)
  • பிள்ளைகளின் கருத்துக்கு மதிப்பளித்தல்.
  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உளவள ஆலோசகரிடமும் முறையிடல்.
  • விழிப்புணர்வு வழங்கல்.
  • கைகொடுத்தல்.
  • சுய காப்பு பற்றி கற்றுக்கொடுத்தல்.

04) வகுப்பு பாகுபாடு


  • ஏற்றத்தாழ்வுகள்.
  • சமூக, சமயக் குழுக்களிடையே பகமையை தூண்டும் விதத்தில் அமைதல்.
  •  சமுதாயத்தை பிளவுபடுத்தும் காரணிகளை ஏற்படுத்துதல்.
  • வன்முறையை உண்டு பண்ணுதல்.
  • கலவரத்தை ஏற்படுத்தல்.
  • வகுப்பறையில் மாணவர்களிடையே இடைவெளி பேணப்படுதல்.

 வகுப்பு பாகுபாடு ஏற்படுவதற்கான அடிப்படைகள் 

  •  மதம் சார்ந்த பிளவுகள்
  •  பொருளாதார காரணிகள்
  • அரசியல் காரணிகள்
  •  ஜாதி
  •  இனம்
  •  தொழில் பாகுபாடு
  •  பண்பாடுகள்
  •  பழக்கவழக்கங்கள்
  •  வேறுபட்ட கொள்கைகள்

 பாதிப்புக்கள்

  •  மன உளைச்சல்
  • ஏற்றத் தாழ்வுகள்
  • கல்வி இடைவிலகல் 
  • விரக்திக்கு உட்படல்.
  • தனிமை முரண்பாடுகள்.
  • வன்முறைகள்
  • தற்கொலைகள்.
  •  குற்றச் செயல்களில் ஈடுபடல்.

 தவிர்க்கும் முறைகள்

  • குழு வேலைகளில் ஈடுபடுத்தல் 
  •  சமமாக உட்கார வைத்தல்.
  • பொதுவான வழிகாட்டல்
  • தலைமத்துவப் பயிற்சி வழங்கல்.
  •  ஆலோசனைகளை வழங்கல்.
  •  சட்ட விதிமுறைகளை விதித்தல்.
  • விழுமிய கல்வியை போதித்தல்.


05) வன்முறைகள்

ஒருவர் வேண்டுமென்றே சக்தியைப் பயன்படுத்தி தனக்கு அல்லது மற்றொரு நபருக்கு / ஒரு சமூகத்திற்கு உடல் ரீதியான அச்சுறுத்தல், அதிர்ச்சி, உளவியல் ரீதியிலான பாதிப்பு உருவாக்குவதுடன் மரணத்துக்கும் வழிவகுக்கும் செயற்பாடு.
       -  WHO -           

ஏற்படுத்தக் கூடிய நபர்கள்

  • குடும்ப உறுப்பினர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • சக பயணிகள்
  • சக நண்பர்கள்
  • ஆசிரியர்கள்
  • அதிபர்கள்

விளைவுகள்

  • பயம்
  • கல்வியில் நாட்டமின்மை
  • பதட்டம்
  • சோர்வு
  • பழி தீர்க்கும் எண்ணம்
  • தனிமையை விரும்பல்
  • மதிப்பீடுகளில் குறைவான புள்ளி பெறல்.
  • பாடசாலை நிகழ்வுகளிலிருந்து ஒதுங்குதல்.
  • பாடசாலையிலிருந்து இடைவிலகல்.
  • சுற்றத்தார் மீது வெறுப்பு.
  • பகை உணர்வு.

வன்முறையிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் முறைகள்.

  • விழிப்புணர்வு.
  • வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
  • கருத்து தெரிவிக்க உரிமை வழங்கல்.
  • தலைமைத்துவ பயிற்சி வழங்கல்.
  • பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு அரவணைத்தல்.
  • நம்பிக்கையை வழங்கல்.


06) இன ரீதியான பிரச்சினைகள்


  • பல்லின மாணவர்கள் ஒரே வகுப்பில் கற்பதால் ஏற்படும் முரண்பாடு.
  • பெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் இனத்துவத்தை ஏற்படுத்தல்.
  • ஆசிரியர்கள் இனத்துவம் பேணல்.

இன பிரச்சினைகள் யாருக்கு இடையில் ஏற்படலாம்.

  • மாணவ - மாணவருக்கு இடையில்.
  • ஒரு வகுப்பு மாணவர்களுக்கும் இன்னொரு வகுப்பு மாணவர்களுக்கும் இடையில்.
  • மாணவ - ஆசிரியருக்கு இடையில்.
  • ஆசிரியர் - ஆசிரியருக்கு இடையில்.
  • மாணவ - கல்வி சாரா ஊழியருக்கு இடையில்.

விளைவுகள்

  • மாணவர் மனநிலை பாதிக்கும்
  • ஒருவருக்கொருவர் குரோதம் ஏற்படும்.
  • கற்றலில் வீழ்ச்சி.
  • மாணவர் - மாணவர் உறவு பாதிக்கும்.
  • பெற்றோருக்கு இடையில் முருகல் ஏற்படும்.
  • வகுப்பறை குழுச்செயற்பாடுகள் பாதிக்கும்

தவிர்க்கும் வழிமுறைகள்

  • விழிப்புணர்வு வழங்கல்.
  • சமத்துவ உணர்வை ஏற்படுத்தல்.
  • குழுச்செயற்பாடுகளை செய்வித்தல்.
  • ஜனநாயக உணர்வை வலுப்படுத்தல்.


Tuesday, 21 January 2025

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மற்றும் அறிவுரை (வேறுபாடு) - Guidense, counseling and Advoice (Difference)

 வழிகாட்டல் 


 "வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள உதவி தேவைப்படும் ஒருவருக்கு அதற்கான தகமை உள்ள ஒருவரால் வழங்கப்படும் உதவி."

- குரோ And குரோ-


" எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவெடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் எனப்படும்."

எஸ். மொறிசன்


"அபிவிருத்தி சார்ந்த ஒரு செயன்முறையாகும். அது தனியாளின் தொழில் சார் கல்வி, தனிப்பட்ட சமூக அனுபவங்கள் தொடர்பாக வழங்கப்படுதலாகும்."

ரொபட் மதிவ்சன்


"தீர்மானம் எடுப்பதற்கும் இசைவடைவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணரும் சுய விருத்தி செயன்முறை ஆகும். "

ஆதர் ஜோன்ஸ், ஜோர்ச், மயர்ஸ்


"மாணவருக்கு பாடசாலையுடன் இசைவடைவதற்கும் கற்கைப் பரப்பை தெரிவு செய்து கொள்வதற்கும் வழங்கப்படும் உதவி. "

டருமன் கெலி


"மாணவன் பாடசாலையையும், வாழ்க்கையின் தாக்கங்களையும் வெற்றி கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் ஒரு தலையீட்டுச் செயன்முறையாகும்."

விவிலியம் பெரொக்டர்


"தான் எதிர்கொள்ளும் பிரச்சனை நிலைமைகளை இனங்கண்டு இவை தொடர்பாக வெற்றிகரமாகத் துலங்குவதற்காகத் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணர்ந்து, உறுதியான சுய எண்ணக்கருவின் முதிர்ச்சியை நோக்கிச் செல்வதற்காக வழங்கப்படும் ஓர் உந்துகையாகும்."

கார்ல் ரொஜர்ஸ்


"தெரிவு செய்தல் பொருத்தப்பாடு கானல் பிரச்சனை தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உதவி வழிகாட்டல் ஆகும்."

ஆ. ஜே. ஜேம்ஸ்



 ஆலோசனை



"ஒருவருக்கு அவர் பற்றிய சுய விளக்கத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படும் உதவி ஆலோசனை ஆகும்."

கார்ல் ரொஜர்ஸ்



"ஆலோசகருடன் ஒரு தனியாள் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் ஆலோசனை ஆகும்."

போடின் 




வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு இடையிலான வேறுபாடுகள்


வழிகாட்டல்

  • இலகுவானது.
  • பரந்துபட்டது.
  • விஞ்ஞான செயன்முறை இருக்காது.
  • தீர்வுக்கு வழிகாட்டப்படும்.
  • விசேட பயிற்சி தேவையில்லை.
  • நூல் அறிவு மட்டும் போதுமானது.
  • கூட்டான செயன்முறை.


 ஆலோசனை

  • சிக்கலானது.
  • ஆழமானது.
  • விஞ்ஞானம் சார் செயன்முறை.
  • தனியாள் தானே தீர்வை தேட வழிகாட்டப்படும்.
  • விசேட பயிற்சி தேவை.
  • உளவியல், ஆள்மன, புள்ளியியல் அறிவு தேவை.
  • நூல் அறிவுடன் செயன்முறை பயிற்சியும் தேவை.
  • தனியாளின் உள்ளார்ந்த செயன்முறை.



வழிகாட்டல் மற்றும் அறிவுரைப்புக்கு இடையிலான வேறுபாடுகள்


ஆலோசனை

  •  பொருத்தமான சூழல் முக்கியம்.
  • ஒழுக்க கோவை அவசியம்.
  • பிரயோக பயிற்சி அவசியம்.
  • ஆலோசகரின் ஆதிக்கம் இருக்காது.
  • புத்திமதி கூறக்கூடாது.
  • தீர்வு சொல்ல முடியாது.
  • ஆலோசனையை ஏற்க்கலாம் ஏற்காமலும் விடலாம்.
  • ஆலோசனையை மையமாகக் கொண்டது.
  • பொறுப்பு, சேவைப்பொறுப்பாளரைச் சாரும்.
  • ஆலோசனை நாடியை மையமாகக் கொண்டது.

அறிவுரை


  • பொருத்தமான சூழல் அவசியமன்று.
  • ஒழுக்க கோவை அவசியமன்று.
  • பிரயோக பயிற்சி தேவை இல்லை.
  • ஆலோசகரின் ஆதிக்கம் இருக்கும்.
  • புத்திமதி கூறப்படும்.
  • தீர்வு காண முடியாது.
  • அறிவுரையை கட்டாயம் ஏற்க வேண்டும்.
  • பொறுப்பு அறிவுரை வழங்குபவரைச் சாரும்.
  • அறிவுரை கூறுபவரை மையமாகக் கொண்டது.

Thursday, 2 January 2025

இலங்கையில் ஏற்பட்ட பௌத்த பரம்பல் - The Buddhist tradition in Sri Lanka -

இலங்கையில் இடம் பெற்ற பௌத்த பரம்பல்

 இலங்கை வரலாற்றிலே கி.மு 3ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பரவலடைந்த சமயம் பௌத்த சமயமாகும். இந்தியாவில் கபிலபஸ்து என்ற இடத்தில் அவதரித்த சித்தார்த்தர் என்ற இயற்பெயர் கொண்ட கௌதம புத்தரினால் மூப்பு, பிணி, சாக்காடு என்னும் மூன்று நிலையாமைக் கருத்துக்களின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது பௌத்த சமயமாகும். அந்த வகையில் இந்தியாவில் தோன்றி வளர்ந்த இச்சமயம் அசோகச் சக்கரவர்த்தி என்ற மௌரிய வம்ச மன்னன் ஆட்சிக்காலத்தில் இலங்கையிலே ஆட்சி புரிந்த தீஸனுடன் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக பரப்பப்பட்டது என தெரிய வருகிறது.


 அசோக சக்கரவர்த்தி கி.மு 261 ஆம் ஆண்டு கலிங்க யுத்தத்தின் பின்னர் பௌத்த சமயத்திக்கு மதம் மாறினார். இவ்வாறு மதம் மாறிய அவர் கி.மு 246 ஆம் ஆண்டளவிலே மூன்றாவது பௌத்த மகாநாட்டை "பாடலிபுரம்" என்ற இடத்திலே கூட்டினார் . இந்த மகாநாட்டிற்கு "மகாலிங்க புத்த தேரர்" என்பவர் தலைமை தாங்கினார். இவர் மகாநாட்டின் முடிவிலே பௌத்த சமயத்தை பரப்ப வேண்டுமாக இருந்தால் தர்ம விஜய குழுக்களை நிறுவி (மகாமந்திரர் குழு) அவர்கள் மூலம் பௌத்தத்தை உலக நாடுகளுக்கு பரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


 இதன் பிரகாரம் மகிந்த தேரர் என்பவர் தலைமையில் இத்திய, உத்திய, சமபல, பத்தசால, பண்டுக, உபாசக சுமனசாமனேய ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்று இலங்கை வந்தது. அவ்வாறு இலங்கை வந்த குழுவினர் மிகிந்தலை குன்றிலே தங்கி இருந்தனர். அவ்வேளையில் மூத்த சிவனின் மகனான தீஸன் தனது நண்பர்களோடு மிகிந்தலை பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அவ்வேளையில் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீஸன் தனது நண்பர்களை பிரிந்து தனியே நின்ற போது "ஏய் தீஸா இங்கே வா" என ஒரு குரல் கேட்டது. அவ்வேளையில் குரல் வந்த திசையை நோக்கி தீஸன் திரும்பிய போது அங்கே மகிந்த தேரர் நிற்பதை கண்டார். மஹிந்த தேரரை பார்த்து தீஸன் நீங்கள் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்? எனக் கேட்டான். அதற்கு மகிந்த தேரர் தான் அசோகனது விருப்பின் பெயரில் இலங்கைக்கு பௌத்த சமயத்தை பரப்புவதற்காக வந்ததாக தெரிவித்தார். பௌத்தம் பற்றி கேட்டு அறிந்து கொண்ட தீஸன் தானும் அந்த மதத்தை பின்பற்ற விரும்புவதாகவும் சிறிது நாட்களின் பின் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக கூறி அரண்மனைக்கு திரும்பினார்.


  சிறிது நாட்களின் பின் தீஸன் தனது முடி சூட்டு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டான். அசோகனிடம் அரிட்ட குமார என்ற இளவரசன் தலைமையிலான குழு ஒன்றினை அனுப்பி வைத்தான். அவ்வாறு சென்ற குழுவினர் அசோகனிடம் சென்று தீஸன் ஒரு முடிசூட்டு விழாவை நடத்த ஆசைப்படுவதாக தெரிவிக்கவே உடனே அசோகன் முடி சூட்டு விழாவிற்கு தேவையான பொருட்களையும் சில புரோகிதர்களையும் அனுப்பி வைத்தான். "நீண்டவாள், கிரீடம், பட்டாடைகள், முத்துமாலைகள், அரச ஆபரணங்கள்" உள்ளிட்ட பொருட்களையும் அத்தோடு "கல்ல பத்த       பதோபம்"                                (மும்மணிகளிடத்தே நீயும்                  சரணடைவாய் என எழுதப்பட்ட ஒரு ஓலையையும் அரிட்ட குமாரனிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு தீஸன் மிக பிரமாண்டமான முடிசூட்டு விழா ஒன்றை நடத்தினார். இது தீஸனது இரண்டாவது முடி சூட்டு விழா ஆகும்.


 தீஸன் மிகிந்தலையிலே தங்கி இருந்த மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அரண்மனைக்கு வரவழைத்து பௌத்தம் பற்றி உரையாற்ற வாய்ப்பளித்த வேளையில் அங்கே மகிந்த தேரர் உரையாற்றினார். இதனால் பலர் பௌத்த சமயத்தை பின்பற்ற விருப்பம் தெரிவித்தனர்.  தீஸன் அசோகனது பட்டப் பெயரான "தேவானாம் பிரிய" என்பதை தன் பெயருடன் இணைத்து "தேவ நம்பிய திஸ்ஸ" என மாற்றிக் கொண்டான். அத்துடன் தன்னை பௌத்தனாகவும் மாற்றிக் கொண்டான். சிறிது நாட்களின் பின்னர் மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அனுராதபுரத்திற்கு வரச் செய்து அரண்மனையிலே உரையாற்ற செய்தான். அவ்வுரையை கேட்ட பலரும் பௌத்தத்துக்கு மாறினார்கள். குறிப்பாக தீஸன் பௌத்தனாகவும் அரிட்டன் பௌத்த துறவியாகவும் மாறிக்கொண்டனர். பௌத்த மதம் பரவல்  அடைவதைக் கண்ட தீசன் தனது தந்தையாரால் அமைக்கப்பட்டிருந்த மகாமேகவன பூங்காவை பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கினான். மகாமேகவன பூங்காவை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பௌத்த சமயம் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு பௌத்த சமயம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில் இலங்கையில் தூபிகள், விகாரைகள் அமைப்பதற்கு மகிந்ததேரர் விரும்பினார். தனது விருப்பத்தை திஸனிடம் தெரிவிக்கவே தீசன் சுமணதேரர் தலைமையில் ஒரு குழு ஒன்றை வட இந்தியாவுக்கு அனுப்பி அசோகனிடம் நிலைமையை தெரிவிக்கவே அசோகன் பௌத்த கட்டிடங்களை நிர்மாணிக்க கூடிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். குழுவினரிடம் புத்தரது வலது பக்க விலா எலும்பு உட்பட பல பௌத்த புனித பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அப்பொருட்களை முதன்முதலில் மிகிந்தலை குன்றிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. குன்று புனித பொருட்களால் புனிதமடைந்தது என கூறப்படுகின்றது. இப்புனித பொருட்கள் அங்கு வைக்கப்பட்டதால் மிகுந்தலையானது "சேத்தியகிரி" என்றும் "நிசாகபர்வதம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர் பல்வேறு விகாரைகள், தூபிகள் மற்றும் கட்டிடங்களை நிறுவினார்கள் என தெரிய வருகிறது. மகாவிகாரை பகுதியிலே தூபராமதாது கோபம் என்ற தூபி ஒன்றை நிறுவினான். அதனுள் புத்தபிரானது எலும்பு எச்சம் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டது. பிக்குகளுக்காக பிக்கு சாசனம் என்ற கட்டிடமும், பெண் பிக்குகளுக்காக பிக்குணி சாசனம் (மகாபாலி) நிறுவப்பட்டது. இது மகாவிகாரை என அழைக்கப்பட்டது. இசுருமுனிய விகாரை, படன விகாரை, ஜம்புகோள விகாரை, திசமகாராம விகாரை, ஹத்தாஸ்கஹ விகாரை உள்ளிட்ட பல்வேறு விகாரைகள் நிறுவப்பட்டன. பௌத்த கட்டிடங்கள் நிறுவப்பட்டதை தொடர்ந்து இலங்கையிலே கட்டடக்கலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. தீஸன் கட்டடக்கலை, சிற்பக்கலை வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் செலுத்தினான்.


 பௌத்த சமயம் பரவல் அடைந்தபோது அனுலா தலைமையிலான சில பெண்கள் துறவறம் போல விரும்பினர். இதற்காக பெண் பிக்குகள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இதற்காக அரிட்டதேரர் தலைமையில் ஒரு தூதுக்குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சங்கமித்தை என்ற பெண் துறவியுடன் ஒரு குழு ஒன்று இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது. இந்தியாவின் தாமிரலிப்தி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை ஜம்புகோளத் துறைமுகத்தை வந்தடைந்தனர். இவர்கள் பாதஜாத்திரியாக அனுராதபுரத்தை அடைந்து மகாமேகவன பூங்கா பகுதியில் சங்கமித்தை இலங்கை வருகின்ற போது அங்கிருந்து கொண்டு வந்த வெள்ளரசு கிளையையும் மகாமேகவன பூங்கா பகுதியில் நட்டு இலங்கையை "ஒரு பௌத்த பூமி" என அழைத்தார். சங்கமித்தாவுடன் இலங்கை வந்த சில மௌரிய குடும்பங்கள் அனுராதபுரத்தில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். சங்கமித்தையிடம் கல்விகற்று அனுலா மற்றும் அவளது குழுவினர் துறவறத்தை பின்பற்றினர்.


 இவ்வாறாக தீஸன் காலத்திலே இலங்கையில் பௌத்த சமயமானது நிலைபெற்று பரவி இருந்தமையை காண முடிகிறது.


M. பத்மன் 

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...