Friday, 16 June 2023

பிரித்தானியர்கள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தியமைக்கான காரணங்கள்

பிரித்தானியர் காலம் (1796 - 1948)


 பிரித்தானியர் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த காரணம.


 இலங்கையின் கரையோர பகுதிகளில் ஒல்லாந்தர் தங்கி இருந்த காலப்பகுதியில் பிரித்தானியர் இந்தியாவில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். குறிப்பாக சென்னை, கல்கத்தா, கர்நாடகா உட்பட பல பகுதிகளில் பிரித்தானியர் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களின் ஆதிக்க விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை தேவைப்பட்டது. இதனால் இலங்கை மீது பிரித்தானியர்கள் கவனம் செலுத்த தொடங்கினர்.


 இலங்கை மீது பிரித்தானியர் கவனம் செலுத்தியமைகாண காரணங்கள்.


 இந்து சமுத்திர பிராந்தியத்திலே இலங்கை மிகவும் முக்கிய இடத்தில் அமைந்து இருப்பதால் அதனை கைப்பற்றுவதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தலாம் என பிரித்தானியர் கருதினர். இதனால் இலங்கையை கைப்பற்ற விரும்பினர்.


 இலங்கையிலே காணப்பட்ட மிகவும் பாதுகாப்பானதும் இயற்கை அருண் கொண்டதுமான திருவோணமலை துறைமுகத்தை தமது ஆதிக்க திங்கள் கொண்டு வருவதன் மூலம் ஆசியா கண்டத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளலாம் என பிரித்தானியர் கருதினர்.


 இந்தியாவிலேயே பிரித்தானியருக்கு எதிராக செயற்பட்ட பிரான்சியரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் பிரான்சியர் இலங்கையை கைப்பற்றினால் அது தமக்கு ஆபத்தாகிவிடும் என கருதியும் இலங்கையை கைப்பற்ற விரும்பினர்.


 வாணிப ரீதியாக இலங்கை கறுவா, மிளகு, ஏலக்காய் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களையும் பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இரத்தினக்கல், முத்து போன்ற விலை உயர்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளவும் இலங்கை ஏற்புடையதாக இருந்ததால் இலங்கையை தம் வசப்படுத்திக் கொள்ள விரும்பினர்.


 மேற் கூறப்பட்ட காரணங்களினால் இலங்கை மீது பிரித்தானியர் ஆதிக்கம் செலுத்த விரும்பிய போது இலங்கையின் கண்டி இராஜ்யத்தில் இருந்த அரசர்கள் இந்தியாவிலிருந்த பிரித்தானியர்களின் உதவியை நாடி இலங்கை பகுதியிலிருந்து ஒல்லாந்தரை வெளியேற்றிக் கொள்ள விரும்பினர். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனை சந்தித்த ஜோன் பைபஸ் (1762) கண்டி அரசனுக்கு உதவுவதாக கூறிய போதிலும் பிரித்தானியர்கள் கண்டி அரசனுக்கு உதவ முன் வரவில்லை.


 இராஜாதி ராஜசிங்கன் கண்டி இராசதானிக்கு அரசனாக இருந்தபோது கியூபொயிட் (1982), றொபேட் அண்றறூஸ் (1795) போன்றோர் கண்டி அரசனுடன் தொடர்பு ஏற்படுத்திய போதிலும் அவர்களும் அக்காலத்தில் ஒல்லாந்தருடன் பிரித்தானியர் நல்லுறவை பேணியதன் காரணமாக கண்டிய அரசனுக்கு உதவவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் 1794 பிரான்சில் அரசனாக இருந்த நெப்போலியன் போனபார்ட் ஒல்லாந்து மீது போர் தொடுத்த வேளை ஒல்லாந்து இளவரசனான ஒரேஞ்ச் வில்லியம் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று தஞ்சம் கோரினான்.


 அவ்வேளை இலங்கையில் உள்ள ஒல்லாந்த தேச தேசாதிபதியாக இருந்த பன் எங்கல் பெக் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பிரித்தானியர்கள் 1794இன் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர்களிடம் இருந்து தாக்கி இலங்கையை கைப்பற்ற முயன்றனர். 1796 இல் முற்று முழுதாக இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றி கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...