இந்தியாவில் காணப்பட்ட குப்தப் பேரரசின் தோற்றம் மற்றும் அவ் அரசில் முக்கியமான மன்னர்கள் பற்றிய தகவல்கள் கீழ் வரும் காணொளியில் தரப்பட்டுள்ளது.
Click and watch this vedio 👇👇👇
இந்தியாவில் காணப்பட்ட குப்தப் பேரரசின் தோற்றம் மற்றும் அவ் அரசில் முக்கியமான மன்னர்கள் பற்றிய தகவல்கள் கீழ் வரும் காணொளியில் தரப்பட்டுள்ளது.
Click and watch this vedio 👇👇👇
இலங்கையின் தேசிய இயக்கம் மற்றும் கோல்புறுக் கமரன் யாப்பு பற்றிய முக்கிய அம்சங்கள் தரப்பட்டுள்ள காணொளியில் உள்ளடங்கியுள்ளது.
Click and watch this vedio 👇👇👇
பிரித்தானியரது காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை உட்பட்டிருந்த வேளை பிரித்தானியர்களால் பல்வேறு அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் கிபி 1910 குறூ மக்கலம் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1921 மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1924 மனிங் டெவன்ஸியர் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1931 டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஆகியவை முக்கியமானவை. அவற்றில் உள்ளடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கீழ்வரும் காணொளியில் தரப்பட்டுள்ளன.
Click and watch this vedio 👇👇👇
இலங்கையில் கி. பி 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி யாப்பில் உள்ளடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கீழ் வரும் காணொளியில் இடைக்கப்பட்டுள்ளன.
Click and watch this vedio 👇👇👇
பிரித்தானியர் ஆட்சிக்கால இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களில் ஒன்றான கல்வி பற்றிய மாற்றங்களும், உள்நாட்டின் சமய கலாசார மறுமலர்ச்சி தொடர்பான விடயங்களும் கீழ்வரும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன.
Click and watch this vedio 👇👇👇
இரஜரட்டை நாகரிக மன்னர்களான மகாபராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்லன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் அவர்களது சாதனைகளும் கீழ்வரும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன.
Click and watch this vedio 👇👇👇
"தன்னை பற்றி விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அறிவை வழங்கும் செயன்முறையை கல்வி ஆகும். "
"நல்ல மனிதர்களை உருவாக்குவதும் அவர்கள் நல்ல முறையில் செயலாற்ற வழி வகுக்கும் செயன்முறையே கல்வியாகும். "
"அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மீளமைப்பதும் கல்வியாகும்."
"இயற்கையோடு ஒட்டியதாக தோன்றும் செயன்முறையே கல்வியாகும்."
"அறிவை செயன்முறையாக்கப் பயன்படுத்தும் கலையை கைப்பற்றி கொள்ளுவதாகும். "
"தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பத்தை வழங்கி தடைகளை விலக்கி கலாசார அருங்கொடைகளை ஒப்படைத்து சமூகத்திற்கு பயனுள்ள தனியாளை உருவாக்குதல். "
"கல்வி என்பது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் சிறந்ததை வெளிக்கொணரும் ஒரு செயன்முறை."
"பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், விளக்கம் என்பவற்றை வெளிக்கொண்டு வரும் செயற்பாடு. "
"கல்வி என்பது ஒரு நடைமுறைச் செயன்முறையாகும். "
" நீங்கள் ஒருவருக்கு பெருமதியை பெற்றுத்தரும், அறிவாற்றல், விளக்கமானது பூரண மனிதனை உருவாக்குகிறது. "
"மனிதன் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக சக்திகளை விருத்தி செய்யும் செயன்முறையாகும்."
"கல்வி என்பது சமாதானத்தை விருத்தி செய்வதும் மனிதனது ஒற்றுமையை போசிப்பதுமான ஒரு செயன்முறையாகும்."
Mathur & Thadani
"கல்வி என்பது மாணவரின் முழுமையான விருத்தியை குறிக்கோளாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட கலைத்திட்டத்தின் ஊடான முறை சார்ந்த மற்றும் முறை சாராத முறைகளைக் கொண்ட நீடித்த செயன்முறை."
உலக அமைதி பேண உருவாக்கபட்ட ஐக்கிய நாடுகள் சபை பற்றிய முக்கியமான விடயங்களின் தொகுப்பு.
Click 👇🏻👇🏻
ரஷ்யாவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட இப் புரட்சியானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப் புரட்சி பற்றிய ஒரு கண்ணோட்டம்.
👇🏻👇🏻👇🏻 Click
இலங்கை வரலாற்றிலேயே 1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே விளங்குகின்றது. இலங்கையில் சட்ட நிரூபணசபை அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையில் இருந்த ஆள்பதி சேர். கியூ. கிளிபேட் என்பவர் புதியதொரு யாப்பு அவசியமான வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக 1927 ஆம் ஆண்டு இலங்கை வந்த டொனமூர் குழுவினர் 141 பிரமுகர்களை சந்தித்து உரையாடியும் 44ற்கு மேற்பட்ட மேடை கூட்டங்களை நடாத்தியும் சில தீர்மானங்களை முன்வைத்தனர். ஆள்பதி றொபேட் ஸ்ரான்லி காலத்தில் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்பின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை சகல துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக குறிப்பிடப்படுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அறிமுகப்படுத்திய வேளை இலங்கையில் இருந்து மத்தியதர வர்க்கத்தினரை சேர்ந்தவர்கள் எதிர்த்தனர். குறிப்பாக A.Eகுணசிங்க உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரித்தனர். ஆனால் பெரும்பாலான மத்தியதர மக்கள் எதிர்த்தனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அவ் வேளையில் டொனமூர் பிரபு சர்வஜன வாக்குரிமை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றார். அது மாத்திரமல்லாது "நீந்த வேண்டுமானால் நீரில் இறங்க வேண்டும் அதேபோல் அரசியல் அறிவு வளர வேண்டுமானால் அரசியல் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்." அதற்காக சர்வஜன வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார்.
இதனால் சர்வஜன வாக்குரிமை டொனமூர் சிபாரிசின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். (ஆண் பெண் இருபாயாரும்) அரசு கழகத்திற்கான உறுப்பினரில் 50 பேர் தேர்தல் மூலம் அதாவது மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச வாரியாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சர்வஜன வாக்குரிமையானது இலங்கையில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது என அனுபவரீதியாக காணமுடிகிறது. இலங்கை வரலாற்றில் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போது பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின. ஆனாலும் அது அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கை வரலாற்றிலே பல்வேறு மாற்றங்கள் தோன்றின. இன்றைய நவீன இலங்கையின் மாற்றங்களுக்கு அவ்வாறான வாக்குரிமை மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
சர்வஜன வாக்குரிமையின் அறிமுகத்தால் பெண்களின் அரசியல் அறிவு வளர்ச்சி அடைய தொடங்கியது. அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர். பெண் அரசியல் தலைவர்களும் உருவாகினர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பெண் பிரதமராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா பெண் ஜனாதிபதியாகவும் இலங்கையில் இருந்து ஆட்சி புரிந்திருப்பதை காணலாம். பெண்கள் அரசியலில் ஈடுபட்டதால் பெண்கள் நலன்சார் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெண்களுக்கு என தனியான வைத்தியசாலைகள், மகளிர் பாடசாலைகள் நிறுவப்பட்டன. பெண்களுக்கு என தனி அமைச்சும் ஒதுக்கப்பட்டது. பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுவதற்கு சர்வஜன வாக்குரிமை தூண்டுகோலாக மாறியது.
சர்வஜன வாக்குரிமை செல்வாக்கு பெற்றதால் கட்சி முறை தோன்றியதனால் கட்சியில் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்க வேண்டி இருந்ததால் சாதி வேறுபாடு இன்றி கட்சி முறைகள் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தோன்றி வளர்ச்சி அடைந்திருந்தன. இன்று 60க்கும் மேற்பட்ட கட்சிகள் செயற்படுகின்றன.
சர்வஜன வாக்குரிமை சிறுபான்மையினருக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தியது. ஏனெனில் சிறுபான்மையினர் உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை காணலாம். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூக முன்னேற்றங்களும் விவசாய அபிவிருத்தி போன்றன தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவதால் பல திட்டங்கள் உருவாக வழி வகுத்தது. டி எஸ் சேனநாயக்கா மின்னேரியாத் திட்டத்தையும், உடவளவை திட்டத்தையும், கல்லோயா திட்டத்தினையும் கொண்டு வந்தார். C. W. W கன்னங்கரா இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். சில தீய விளைவுகளுக்கும் வழிவகுத்தது குறிப்பாக S. W. R. D பண்டாரநாயக்கா தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார். இதனை ஒரு பாதிப்பான நிகழ்வு என கருதலாம்.
D.Sசேனநாயக்கா சேனநாயக்க சமுத்திரத்தை உருவாக்கி இருந்தார். இது ஒரு சிறப்பான திட்டமாகும். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களும் மேல் நிலைக்கு வர உதவியது. சௌமிய மூர்த்தி தொண்டமான் R.பிறேமதாச முதலான அரசியல் தலைவர்கள் சர்வஜன வாக்குரிமையினாலேயே மேல்நிலை அடைய முடிந்தது. அதேவேளை லஞ்சம், ஊழல் முதலானவை அதிகரிக்க நேர்ந்ததோடு வாக்குகளை விற்றல், ஆலள்மாறாட்டம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதே வேளை ஜனநாயகம், மனித உரிமை முதலான கோட்பாடுகள் வளர்ச்சி அடையவும் வழி வகுத்தது. பின்னணியில் சுதந்திரம் பற்றிய எண்ணம் வளர்ச்சி அடையவும், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் வளர்ச்சி அடையவும் உதவியது. அதுமாத்திரம் அல்லாது சிறுபான்மையினருக்கு பாதிப்பான நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர் உள்ள இடங்களில் தேர்தலில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் காணப்பட்டது.
எனவே கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வஜன வாக்குரிமையானது இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தத்தோடு ஜனநாயக கோட்பாடுகள் வளர்ச்சி அடைய வழிவகுத்திருந்ததனையும் காணலாம்.
டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது அரசு கழகமாகும் இது மொத்தமாக 61 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இதில் 50 பேர் பிரதேச அடிப்படையில் அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் மூலம் 50தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் சார்பாக ஆள்பதி எட்டு பேரை நியமனம் செய்வார். அவர்களுடன் பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், நீதி செயலாளர், ஆகியோரை உள்ளடக்கி மொத்தம் 61பேரை உள்ளடக்கியதாக காணப்படும்.
அரசு கழகம் ஆனது சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரம் மிக்க மன்றாக செயற்படும். அரச துறையில் இலங்கைக்கு அனுபவம் கிடைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக விளங்கியது. எந்த ஒரு மசோதாவும் இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னரே சட்டமாக முடியும் ஆகவே சட்ட உருவாக்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மன்றாக இது விளங்கியது. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவர்கள் செய்யப்பட்டனர்.
டொனமூர் யாப்பில் ஏழு நிர்வாகக் குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுக் கழகத்தில் பிரதேச அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 50 பேரும் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேரும் உள்ளடங்கிய 58 பேரும் 7 நிர்வாக குழுவாக வகுக்கப்படுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் 6 தொடக்கம் 9 வரை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் அரசாங்க சேவை ஒழுங்காக இடம்பெறும் என டொனமூர் சிபாரிசு செய்தார்.
இங்கிலாந்தில் தேசிய அரசு
இங்கிலாந்து தேசிய அரசாக எழுச்சி பெற்ற நாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அங்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் மற்றும் மக்கள் முதலானோரின் தேசிய உணர்வு, அரசியல் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் தேசிய அரசை உருவாக்கியிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து சிறந்ததொரு நிலையை அடைந்திருந்ததென தெரிய வருகிறது. இங்கிலாந்து ஒரு தனிப் பிரதேசமாக காணப்பட்டது. குறிப்பாக சுற்றிவர கடல் காணப்பட்டமை, வெளிநாட்டு தொடர்புகள் அற்ற ஒரு தீவு போன்று காணப்பட்டமை, மிகச்சிறந்ததொரு தனித்துவம் உடைய நாடாக அதனை மாற்றியது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் ஆரம்பத்தில் அது பல துண்டுகளாக பிரிந்து காணப்பட்டது. ரோமானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றியதை அடுத்து அங்கே மக்கள் ரோமானியர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். இதுவே அது தேசிய அரசாக உருவாக மிக முக்கியமான காரணமாகும். அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்களுடைய செயற்பாடுகளும் அதனை தேசிய அரசாக மாற்றியது.
நொமண்டில் பிரதேச ஆட்சியாளனாக விளங்கிய முதலாம் வில்லியம் முதலாவதாக நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். பிளவுற்று இருந்த பிரதேசங்களை ஒன்றிணைத்தான். மானிய பிரபுக்கள் அங்கு செல்வாக்கு பெற்றிருந்ததால் அவர்களின் செல்வாக்கை குறைக்கும் நோக்குடன் சவிஷ்புரி என்ற உடன்படிக்கை ஒன்றை செய்து சிற்றரசர்களையும் பிரபுக்களையும் மன்னனுக்கு வரி செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தான். இதனால் மன்னனின் வலிமை அதிகரிக்க மானிய பிரபுத்துவ முறை செல்வாக்கிழந்து போனது. இவன் லண்டியம் என்று அழைக்கப்பட்ட லண்டனை தலைநகரமாகக் கொண்ட அரசை உருவாக்கியமை மிகச்சிறந்த அம்சமாகும்.
கிபி 1154 ஆம் ஆண்டளவிலே ஆட்சிப்பீடம் ஏறிய இரண்டாம் ஹென்றி நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பு ஒன்றை உருவாக்கினான். இதன் மூலம் நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதிமுறைகளையும் உருவாக்கினான். பொலீஸ் சேவை, நீதிச்சேவை என்பவற்றை ஏற்படுத்தியதோடு நீதிபதிகளையும் யூரிமாக்களையும் நியமித்து அதன் மூலமாக நீதித்துறையை ஒழுங்கு படுத்தினான். ஒவ்வொரு பிரதேசங்களிலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காவலர்களையும் நீதித்துறையின்ரையும் நியமித்தான்.
இங்கிலாந்து தேசிய அரசாக உருவாகுவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவன் ஏழாம் ஹென்றி ஆவான். இவன் லங்காஸ்ரர் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்த போதும் ஜோகிற்ஸ் வம்சத்துடன் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்த ரோசாப்பூ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். ஜோகிற்ஸ் வம்சத்தினருக்கும் லங்காஸ்ரர் வம்சத்தினருக்கும் இடையே ஜோகிற்ஸ் வம்சத்தினர் வெள்ளை ரோஜாவையும் லங்காஸ்ரர் வம்சத்தினர் சிவப்பு ரோஜாவையும் சின்னமாகக் கொண்டு இங்கிலாந்திலே யார் ஆட்சியை கைப்பற்றுவதெனும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ் வேளை லங்காஸ்ரர் வம்சத்தில் வந்த ஏழாம் என்று ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த ரிச்செட் என்பவனை தோற்கடித்து ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த எட்வேட் என்பவனது மகளை திருமணம் செய்து மீண்டும் இது வம்சங்கள் இடையே முரண்பாடு வராமல் தடுத்தான். அதேவேளை புதிய வம்சமான தியூடர் வம்சத்தை ஆரம்பித்து வைத்ததன் மூலம் புதிய வம்சம் ஒன்றை தொடங்கிய மன்னனாக காணப்படுகின்றான் இவன் திகழ்ந்தான்.
ஏழாம் ஹென்றி ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்தான். அந்த வகையிலே நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பை உருவாக்கியதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீதித்துறையை உருவாக்கினான். அந்த வகையிலே நட்சத்திர நீதிமன்றம் (Star Chamber) என்ற பெயரிலே நீதிமன்றம் ஒன்றை நிறுவி சிறந்த நீதித்துறை அமைப்பை உருவாக்கினான். அதுமட்டுமல்லாது நீதியை நல்ல முறையிலே வழங்குவதற்காக சிறந்த நீதிபதிகளையும் யூரிமார்களையும் நியமித்தான். மக்களுக்கு அரசன் மீதும் ஆட்சி மீதும் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தேசிய உணர்வுடன் பிரித்தானியா எழுச்சி பெறுவதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
அந்த வகையில் ஆடை உற்பத்தி, பீங்கான் உற்பத்தி, அழகுசாதன பொருட்களின் உற்பத்தி, நிலக்கரி, இரும்பு உற்பத்தி முதலானவற்றிலும் ஆர்வம் செலுத்தினார். இதனால் கைத்தொழில் வளர்ச்சி அடைந்தது. நாடுகான் பயணத்தை மிக முக்கியமான நடவடிக்கையாக மேற்கொண்டதோடு நாடுகான் பயணத்திற்கு பிரான்சிஸ் டிரக்ட், ஜோன்கபெட் போன்றோர்களை ஈடுபடுத்தினார். அத்துடன் பெரும்பாலான துறைமுகங்களை விருத்தியடையச் செய்தான். லிபர்பூல், போபர், மன்செஸ்ரர் முதலிய துறைமுகங்களை விருத்தியடைய செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வாணிபத்தை ஊக்கப்படுத்தினான். நாடுகான் பயணத்தின் மூலம் பல நாடுகளை கண்டறிந்து குடியிருப்புகளை ஏற்படுத்த செய்தான். இவருடைய காலத்தில் அமெரிக்காவில் பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன அந்த வகையில் இங்கு பாரியளவு பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்பட்ட காலமாகவும் இவரது காலம் காணப்பட்டது. கிபி 1485 ஆம் ஆண்டு இவன் ஆட்சிக்கு வந்த காலம் திருச்சபையினதும் பிரபுக்களினதும் அதிகாரத்தை கட்டுப்படுத்தியதோடு மத்தியதர வர்க்கத்தின் எழுச்சிக்கு வழிகாட்டினான். இதனால் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவன் நாட்டில் தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்படுத்தினான்.
வெளிநாடுகளில் பல குடியிருப்புகளை அமைப்பதிலும் இவன் மிகுந்த முக்கியத்துவத்துடன் செயற்பட்டான். ஜோன்கபெற் நியூபௌன்லாந்தை அடைந்ததை தொடர்ந்து அங்கு குடியேற்றங்களை அமைத்ததோடு அமெரிக்காவில் பல குடியேற்றங்கள் உருவாக காரணமாக இருந்ததோடு பெருந்தொகை செல்வங்களைக் கொண்டு வந்து பிரித்தானியாவை அபிவிருத்தி அடைய செய்தான். அரசியல் ரீதியாக ஸ்கொட்லாந்து, ஸ்பானியா முதலான நாடுகளுடன் திருமண தொடர்புகளை ஏற்படுத்தினான். தனது புதல்வர்களை வெளிநாட்டு இளவரசர்களுக்கும் இளவரசிகளுக்கும் திருமணம் புரிந்து கொடுத்து வெளிநாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி இங்கிலாந்தின் முடியாட்சியை பலப்படுத்தினான்.
ஏழாம் ஹென்றியின் பின் ஆட்சி பீடம் ஏறிய எட்டாம் ஹென்றி மிகவும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினான். ஆரம்பத்தில் போப்பாண்டவருடன் நல்ல உறவை ஏற்படுத்தி இருந்த இவன் தனது இரண்டாவது திருமணத்திற்காக போப்பாண்டவரிடம் அனுமதி கூறியபோது அவர் எதிர்த்ததை தொடர்ந்து போப்பாண்டவருடன் முரண்பட்டு கொண்டான். ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் பாதுகாவலன் என்றெல்லாம் போப்பாண்டவர் பத்தாம் லியோவால் புகழப்பட்ட எட்டாம் ஹென்றி பின்னாளில் ஏற்பட்ட முரண்பாட்டால் எட்டாம் ஹென்றிக்கும் பத்தாம் லியோவிற்கு இடையில் உறவு நிலை முடிவடைந்தது. இந்நிலையில் எட்டாம் ஹென்றி உரோமன் கத்தோலிக்கம் தனது நாட்டிலே எந்த விடயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவிட்டான்.
உயாராண்மை சட்டம் என்ற சட்டத்தின் மூலம் இங்கிலாந்திலே கத்தோலிக்கத்தில் நடவடிக்கைகள் அனைத்திற்கும் தானே பொறுப்பென கட்டளையிட்டத்துடன் கத்தோலிக்க சமயம் சார் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கே சமய ரீதியான அரசியல் தலையீடுகள் இல்லாத ஒழிக்கப்பட்டது. இதனால் பாரிய அளவிலே இங்கிலாந்தின் எழுச்சி உன்னதமான நிலையை அடைந்தது. இவனது காலத்திலே ஆங்கில திருச்சபை (அங்கிலிக்கன் திருச்சபை) நிறுவப்பட்டதோடு அதன் தலைவராக தானே செயல்பட்டார். பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்ட இவன் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் மக்களின் நல்லபிப்பிராயத்தையும் பெற்றான். இதனால் இங்கிலாந்து தேசிய அரசு என்று ரீதியில் மிகச்சிறந்த எழுச்சியை பெற்றுக் கொண்டது.
இவன் பின் ஆட்சி பீடம் ஏறிய ஆறாம் எட்வர்ட், மேரி ஆகியோரின் ஆட்சி சொற்ப காலமே இடம்பெற்றதால் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவியான ஆன்பொலினின் மகளாகப் பிறந்த எலிசபெத் சிறப்பு உடையவளாக திகழ்ந்தார். இவள் ஸ்பானியாவின் ஆர்மடா கப்பல் படையை தோற்கடித்ததோடு மேலும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினாள். இவளது காலத்திலே மிகவும் பரந்த சாம்ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனி கி.பி 1602ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல நாடுகள் கைப்பற்றப்பட்டன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. எலிசபெத் மகாராணியின் ஆட்சியின் போது ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பிரித்தானியாவின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது மாத்திரம் அல்லாது உலகின் அனைத்து கண்டங்களிலும் இங்கிலாந்தின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது.
எலிசபெத் ஆட்சியின் பின் ஸ்ரூவர்ட் வம்சம் ஆட்சிக்கு வந்தது. அதாவது எலிசபெத் திருமணம் புரியாத காரணத்தினால் எலிசபெத்தின் பின் ஆட்சிக்கு வர எவரும் இல்லாத காரணத்தினால் ஸ்ரூவர்ட் என்னும் புதிய வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. ஸ்ரூவர்ட் வம்ச காலத்திலே பாராளுமன்றத்திற்கு மன்னனுக்கும் இடையே சமய ரீதியான முரண்பாடுகள் தோன்றின. இதனால் பாரிய அளவிலே புரட்சி ஒன்று கிபி 1688ஆம் ஆண்டு தோன்றியது. இது ஆங்கிலப் புரட்சி எனப்பட்டது. கிபி 1689ஆம் ஆண்டு இங்கு உரிமைகள் தொடர்பான மசோதா ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தினதும் மன்னனதும் அதிகாரம் வரையறுக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து ஒரு பலம் வாய்ந்த தேசிய அரசாக மாறியது.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக மாறியது.
தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாசார அடிப்படையில் முழுநிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும்." அந்த வகையில் தேசிய அரசு என்பது தனக்கென சில பண்புகளை கொண்டிருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் தேசிய அரசானது பல பண்புகளை உள்ளடக்கியதாக காணப்படுவதே சிறப்பாகும்.
தேசிய அரசு என்பது மிக முக்கியமாக மொழி ரீதியான ஒற்றுமையை கொண்டிருப்பது அவசியமாகும். ஒரே மொழியில் இருப்பதன் மூலம் தேசிய ஒற்றுமை பலப்படுத்தப்படும் அதேவேளை இனரீதியான ஒற்றுமை காணப்படுவதும் இங்கே சிறப்பம்சமாக காணப்பட்டது. மற்றும் தேசிய அரசின் பண்பில் அங்கு மத ரீதியான பிரச்சினைகள் எழாமல் மத ஒற்றுமை காணப்படுவது அல்லது ஒரே வகையான மதம் இருப்பதும் மிக முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில் தேசிய அரசானது பல்வேறு பண்புகளையும் இயல்புகளையும் கொண்டது என தெரிய வருகிறது. ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் சிறந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
அதேபோன்று தேசிய அரசானது நிரந்தரமானதும் வரையறுக்கப்பட்டதுமான எல்லைகளை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. புவிசார் எல்லைகளை கொண்டிருப்பதே நாடு என அரசியலில் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய எல்லைகளை உடையதாகவும் இனம், மொழி, மத அடிப்படையில் ஒற்றுமை தன்மையுடையதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசியல், கலாசார அடிப்படையில் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அங்கே அரசனே முழு நிறைவான அதிகாரமுடையவனாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அங்கே நிரந்தர ராணுவப் படைகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படை, தரைப்படை முதலானவற்றை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உறுதி வாய்ந்த இராணுவத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் அரச ஊதியம் பெறும் உத்தியோகத்தர்களை கொண்டிருப்பதோடு நிரந்தர அரசாங்க சேவையாளர் இங்கே கடமையாற்றுவது முக்கியமானதாகும். அதாவது அரச சேவைப்படை அல்லது ஆளணி ஒன்றை கொண்டிருப்பதோடு அரசன் பிரபுக்களையோ, சிற்றரசர்களையோ, ஏனைய தரப்பினரையோ நம்பி இல்லாது தன்னிடமிருந்து சம்பளம் பெறுகின்ற விசுவாசம் மிக்க கூட்டத்தை தனது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டு செயற்படல் வேண்டும்.
தேசிய அரசு நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு சட்ட தொகுப்பை கொண்டிருப்பதோடு தனக்கென யாப்பொன்றை கொண்டிருப்பது அவசியமாகும். இல்லையெனில் நாட்டிற்கென தனியான சட்ட தொகுப்பை உடையதாக இருக்க வேண்டும். அரசன் நாடுகான் பயணத்திற்கு ஊக்கம் அளித்ததோடு பிறநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக காணப்பட வேண்டும். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் செல்வங்களை பெற்று அந்த செல்வங்களைக் கொண்டு தனது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதோடு பிற நாடுகளில் இருந்து செல்வங்களை பெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும்.
பொருளாதாரத்தை பொறுத்தவரையில் தன்னிறைவு பொருளாதாரம் ஏற்பட்டதோடு விவசாயம், வர்த்தகம் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் முன்னேற்றமான ஒரு நிலை காணப்படும். இதனால் ஒரு வளர்ச்சி அடைந்த பொருளாதார நிர்வாகத்தை காணலாம். நிர்வாக ரீதியாக அரசன், அவனுக்கு கீழ்ப்பட்ட அமைச்சரவை, நிர்வாக அலகுகள் காணப்பட்டன. புத்தாக்க கண்டுபிடிப்பு தனிப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் முதலானவற்றை அங்கு முக்கியத்துவப்படுத்தினர். இதனால் ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியலையும் உறுதிப்படுத்தும் நிலை காணப்பட்டது. பிரபுக்களின் அதிகாரங்கள் குறைவடைந்ததுடன் சிற்றரசர்களின் செல்வாக்கு இல்லாதொழிக்கப்பட்டு புதிய அரசியல் சிந்தனைகளும் காணப்படும். அதாவது நவீன அரசியல் சிந்தனைகளை உள்வாங்கி அங்கே அரசனும் மக்களும் செயற்படுவதோடு அரசனுக்கு பலம் வாய்ந்த நவீன சிந்தனைகளை கொண்ட ஒரு அமைச்சர்களை கொண்ட கூட்டம் மற்றும் ஆளணியினர் காணப்படுவர்.
பிரதேச ஆட்சியாளர்கள் செல்வாக்கிலந்தவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக பிரபுக்கள், சிற்றரசர்கள் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை. அரசனே முழு அதிகாரம் உடையவனாக காணப்பட்டார். மதகுருமார்கள் அங்கே செல்வாக்கு மிக்கவர்களாக இருக்க முடியாது. மதகுருமாரின் தலையீடுகள் தடுக்கப்பட்டது. இங்கே "அரசியல் வேறு சமயம் வேறு" என்கிற அடிப்படையில் காணப்பட்ட போதிலும் அரசனே நாட்டினுடைய கலை, கலாசார, பொருளாதார, அரசியல், சமூக விடயங்களுக்கு பொறுப்பானவனாக காணப்படுவான். இளவரசன் என்னும் நூலில் கூறப்படுவது போல் முழு அதிகாரமும் செல்வாக்கும் அரசரிடம் காணப்பட்டது. எந்த ஒரு வெளிச்சக்தியினது செல்வாக்கும் அந்நாட்டின் எல்லைக்குள் இடம்பெற முடியாது. படையெடுத்தல், சமாதானம் செய்தல், வெளிநாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புதல் போன்ற சகல நடவடிக்கைகளும் அரசனாலேயே முன்னெடுக்கப்பட்டன.
தேசிய அரசானது நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதியை வழங்கக்கூடிய நீதிமன்றத்தை கொண்டிருக்க வேண்டும். அதுமாத்திரம் அல்லாது ஆட்சியாளர் நீதி விடயங்களில் தலையிடக்கூடாது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அத்தோடு ஆட்சியாளன் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை முன்னெடுப்பான். யாவருக்கும் பொதுவான, நாட்டிற்கு பொதுவான தேசிய வரிக் கொள்கை ஒன்று காணப்படும். பொருளாதார ரீதியாக நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளை அரசன் முன்வைக்க வேண்டும். அதேநேரம் ஒன்றுபட்ட முடியாட்சி காணப்பட வேண்டும். அங்கே அரசனே முடியாட்சிக்கு பொறுப்பானவனாகவும் அவனது நிர்வாக நடவடிக்கைகளுக்கு கீழ்ப்பட்டதாக அனைத்தும் காணப்பட வேண்டும். அங்கே யாரும் தனிப்பட்ட ஆட்சியை மேற்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட ரீதியாக அரசனை கட்டுப்படுத்தவோ அல்லது அரசனது செயற்பாடுகளுக்கு முரணாகவோ செயல்படாத வகையிலே வலுப்படுத்தப்பட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகம் இருப்பதே தேசிய அரசாகும்.
எனவே மேற்ககூறப்பட்ட வகையில் தேசிய அரசானது பல பண்புகளை கொண்டிருந்ததனை காணமுடிகிறது.
தேசிய அரசுகளின் தோற்றம்
தேசிய அரசு என்றால் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும். அதாவது ஒரு நாட்டிலே ஆட்சியாளன் முழு விடயங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதோடு முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தன்மையே தேசிய அரசு ஆகும். தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். " அந்த வகையில் தேசிய அரசு கிபி 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் தோன்றிய புதிய வகையான அரசியல் முறை என்பதால் இதனை புதிய முடியாட்சி அல்லது புதிய வகை ஆட்சி முறை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பாவிலேயே முதலிலே தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய குறிப்பிடப்படுகின்ற போதிலும் அண்மைக்கால ஆய்வுகளின் படி இங்கிலாந்தே முதல் தேசிய அரசு எனக் குறிப்பிடுபவரும் உள்ளனர். அதன்பின்னர் பிரான்ஸ், போர்த்துகல், ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசுகளாக மாறின.
தேசிய அரசு என்பது புதிய முடியாட்சி ஆகும். அந்த வகையிலே கிபி 15 ஆம் நூற்றாண்டின் பின் எழுச்சி பெற்று வந்த வலிமையான ஆட்சி முறையே தேசிய அரசாகும். அதாவது வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். அவ்வாறு தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய தோன்றி பின் பிரான்ஸ் போர்த்துகல் ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசாக மாறின என கூறப்படுகிறது. தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக விளங்கியது என சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையிலே தேசிய அரசானது பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்களால் எழுச்சி பெற்றதெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
மானிய முறையின் வீழ்ச்சியின் பின் தோன்றிய மறுமலர்ச்சியானது அரசியல் ரீதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவ்வாறு ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்றாக தேசிய அரசின் தோற்றமும் குறிப்பிட முடியும். மறுமலர்ச்சி காலத்திலே புதிய அரசியல் சிந்தனைகள் தோன்றியது. அவ்வாறு தோன்றிய புதிய சிந்தனையானது அரசியல் உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியது. பிறப்புக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு அரசர்கள் வலிமை மிகுந்தவர்களாக மாறினார். இதனால் தேசிய அரசுகள் தோன்றின. குறிப்பாக ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மிகவும் பலம் வாய்ந்த தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.
பிரபுக்கள் சிற்றரசர்கள் தமது செல்வாக்கை குறைக்கும் நிலை உருவானது. அதாவது பிரபுக்களும் சிற்றரசர்களும் அரசர்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். வலிமை வாய்ந்த அரசர்கள் எழுச்சி பெற்றனர். இதன் காரணமாக இறைமை கொண்ட அரசு எழுச்சி பெற்றது. நாடுகான் பயணங்களின் தோற்றத்தினால் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வலிமை பெறத் தொடங்கினர். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்ட நாடுகளில் அரசர்கள் வலிமை பெற்றனர். குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பானியா, பிரான்ஸ் முதலிய நாடுகள் நாடுகான் பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்டன. இதனால் நிரந்தர படை மற்றும் உள்நாட்டு கட்டுமானங்கள் மற்றும் நிலையான அரசியல் நிலை வளர்ச்சி அடைந்தன. இதன் காரணமாக தேசிய அரசுகளாக இந்நாடுகள் உதயமாகின.
இங்கிலாந்து பிரான்ஸ் ஸ்பானிய முதலான நாடுகளில் வலிமை பெற்ற ஆட்சியாளர்கள் எழுச்சி பெற்றமை தேசிய அரசின் தோற்றத்திற்கு காரணமாக விளங்கியது. அதாவது இங்கிலாந்திலே ஏழாம் ஹென்றி, எட்டாம் ஹென்றி, எலிசபெத் மகாராணி, போன்றோர் பிரான்சிலே மூன்றாம் சாள்ஸ், நான்காம் ஹென்றி, பதினொராம் லூயி, 14ஆம் லூயி போன்றோரும் பானியாவிலே தேடினேன் அவனது மனைவி இசபெல்லா, ஐந்தாம் சாள்ஸ் போன்றோரும் இந்நாடுகளின் எழுச்சிக்கு பெரிதும் உதவினர். இதேவேளை அந்த அரசர்களுக்கு கிடைத்த நல்ல அமைச்சர்களும் அவற்றின் வெற்றிக்கு உதவினர். நான்காம் ஹென்றியின் அமைச்சர் சல்லி கோமானார், எட்டாம் ஹென்றியின் அமைச்சரான கர்தினால் ஊல்கி, 14ஆம் லூயியின் அமைச்சரான கொல்பேட், லூவோ போன்ற அமைச்சர்களும் அரசர்களுக்கு வாய் தமையும் அரசர்கள் சிறந்த அறிவாற்றலும் வலிமையும் கொண்டு பெற்றமை தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தன.
சமய சீர்திருத்தத்தின் தோற்றத்தினால் சமயம் வேறு அரசியல் வேறு என்கிற நிலை தோன்றியது. இதனால் சமய ரீதியான அடக்கு முறையும் ஆதிக்கமும் குறைவடைந்தது. மதகுருமார் போப்பாண்டவர் போன்றோரின் அதிகாரமும் செல்வாக்கும் குறைவடைந்தது. அது மாத்திரமில்லாது பரிசுத்த உரோமப் பேரரசு முறைமை செல்வாக்கிழந்து போனமை இதனால் அரசர்கள் வலிமை பெற்று தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன.
விஞ்ஞான வளர்ச்சி தோன்றியமையால் அரசியல் வளர தொடங்கியது. குறிப்பாக உலகம் உருண்டை என்ற கோட்பாடு செல்வாக்கு பெற்று தேசிய உணர்வு வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில் அறிவியல் வளர்ச்சியால் பல பல்கலைக்கழகங்கள் தோன்றியது. மக்கள் கல்வியறிவு உள்ளவர்களாக மாறினர் அரசியல் அறிவும் வளர்ச்சி அடைந்தது. இதனால் தேசிய அரசுகள் தோன்றின. 'இளவரசன்' (The Prince) என்ற நூலை எழுதிய மாக்கியவல்லி அரசனின் தந்திரம் மக்களின் வாழ்க்கை முறை முதலானவற்றை கூறினார். இதனால் தேசிய அரசு பற்றிய எண்ணக் கோட்பாடுகள் வளர்ச்சி அடைந்தன. ஜீன் போடின் முன்வைத்த கோட்பாடும் மக்களை சிந்திக்க செய்தது. இவ்வாறு மாக்கியவல்லி, ஜீன்போடின் போன்றோரின் சிந்தனைகளும் தேசிய அரசின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
ஜோன்கூட்டன்பேர்க் அச்சியந்திரத்தை கண்டுபிடித்ததை தொடர்ந்து பத்திரிகை, துண்டுப்பிரசுரம், புத்தகம் போன்றன அச்சடிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் அரசியல் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இதனால் அரசியல் அறிவு வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தேசிய அரசுகள் எழுச்சி பெற்றன. பொருளாதார உற்பத்தி போட்டி, நாடுகான் பயணம், வணிகவாதம், கைத்தொழில் புரட்சி முதலானவையும் தேசிய அரசின் தோற்றத்தை ஊக்கப்படுத்தியது. அதாவது வணிக ரீதியாக பொருட்களை பெறுவதிலும் தமது பொருட்களை விற்பனை செய்வதிலும் போட்டி ஏற்பட்டபோது பல நாடுகள் பிறநாடுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றன. இதனால் தேசிய அரசுகள் எழுச்சி அடைந்தன. தேசிய அரசின் தோற்றத்திற்கு ஆயுத உற்பத்தி மற்றும் நிரந்தர படைகளின் உருவாக்கம் என்பனவும், காரணமாகியது எனலாம். அதாவது நாடுகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக நாடுகள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்காக நிரந்தரப் படைகளை உருவாக்கிக் கொண்டதோடு ஆயுத ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக கடற்படை, தரைப்படை போன்றவற்றை பலப்படுத்தினர். புதியரக ஆயுதங்கள், வெடி மருந்துகள் துப்பாக்கிகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டதால் ஒவ்வொரு அரசும் பலம் பெற தொடங்கியமையும் தேசிய அரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
நாடுகளில் தேசிய ரீதியாக மொழி ரீதியான சிந்தனைகள் வளர்ச்சி அடைந்தபையும் தேசிய மொழி, தேசிய மொழி பற்று ஏற்பட்டமையும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இதேவேளை இன ரீதியான ஒற்றுமை ஏற்பட்டமை, மொழி, மதம் போன்ற அடிப்படைகளிலே ஏற்பட்ட ஒற்றுமையும் நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற வழி வகுத்தன. அதுமாத்திரமல்லாது வணிகம், கைத்தொழில் போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்ததால் மத்தியதரவர்க்கம் எழுச்சி அடைந்தது. மத்திய தர வர்க்கத்தின் எழுச்சி காரணமாக மானியமுறை காலத்திலேயே செல்வாக்கு பெற்றிருந்த பிரபுக்கள் செல்வாக்கு குறைவடைந்தது. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்கள் போன்றோரின் செல்வாக்கு குறைவடைந்தமையும் மத்தியதரவர்க த்தின் எழுச்சி காரணமாக ஏற்பட்ட மாறுதல்களும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக அடிமை முறை வீழ்ச்சி அடைந்து அறிவு கொண்ட ஒரு சமூகம் எழுச்சி பெற்றது. அரசியல் சிந்தனைகள் மற்றும் கிரேக்க உரோம சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட நவீன அரசு பற்றிய சிந்தனைகள் எழுச்சி அடைந்தமையும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழி வகுத்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் இறைமை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அரசுகள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்றமையைக் காணமுடிகிறது.
சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...