டொனமூர் யாப்பு (1931)
இலங்கை வரலாற்றிலேயே 1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே விளங்குகின்றது. இலங்கையில் சட்ட நிரூபணசபை அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையில் இருந்த ஆள்பதி சேர். கியூ. கிளிபேட் என்பவர் புதியதொரு யாப்பு அவசியமான வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக 1927 ஆம் ஆண்டு இலங்கை வந்த டொனமூர் குழுவினர் 141 பிரமுகர்களை சந்தித்து உரையாடியும் 44ற்கு மேற்பட்ட மேடை கூட்டங்களை நடாத்தியும் சில தீர்மானங்களை முன்வைத்தனர். ஆள்பதி றொபேட் ஸ்ரான்லி காலத்தில் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்பின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
- சர்வஜன வாக்குரிமை
- ஏழு நிர்வாக குழுமுறை
- அரசு கழகம்
- பிரதேச வாரி பிரதிநிதித்துவமும் விரிவாக்கமும்
- ஆள்பதி அதிகாரக் குறைப்பு
- அரசாங்க செயலாளர் நியமனம் ( மூன்று காரிய தரிசிகள்)
- மந்திரி சபை முறை
- அரசாங்க சேவை ஆணைக்குழு அல்லது பொதுச் சேவை ஆணைக்கு
சர்வஜன வாக்குரிமை
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை சகல துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக குறிப்பிடப்படுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அறிமுகப்படுத்திய வேளை இலங்கையில் இருந்து மத்தியதர வர்க்கத்தினரை சேர்ந்தவர்கள் எதிர்த்தனர். குறிப்பாக A.Eகுணசிங்க உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரித்தனர். ஆனால் பெரும்பாலான மத்தியதர மக்கள் எதிர்த்தனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
- படிப்பறிவற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகள் வீணடிக்கப்படும்.
- ஏழைகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகளை விற்றல் ஆள்மாறாட்டம் செய்தல் வாக்குகளை வீணடித்தல் வாக்கின் பெறுமதியை உணராத நீதிக்கு புறம்பாக செயற்படல் என்பன இடம்பெறும்.
- பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் எந்த பயனும் இல்லை அவர்கள் அரசியல் அறிவு அற்றவர்கள், சமூக அறிவு அற்றவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
- சொத்தற்றவருக்கு நாட்டுப்பற்று கிடையாது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என கூறினார்.
- சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதனால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் எனவும் வலியுறுத்தினார்.
அவ் வேளையில் டொனமூர் பிரபு சர்வஜன வாக்குரிமை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றார். அது மாத்திரமல்லாது "நீந்த வேண்டுமானால் நீரில் இறங்க வேண்டும் அதேபோல் அரசியல் அறிவு வளர வேண்டுமானால் அரசியல் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்." அதற்காக சர்வஜன வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார்.
இதனால் சர்வஜன வாக்குரிமை டொனமூர் சிபாரிசின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். (ஆண் பெண் இருபாயாரும்) அரசு கழகத்திற்கான உறுப்பினரில் 50 பேர் தேர்தல் மூலம் அதாவது மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச வாரியாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சர்வஜன வாக்குரிமையின் தாக்கம்
சர்வஜன வாக்குரிமையானது இலங்கையில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது என அனுபவரீதியாக காணமுடிகிறது. இலங்கை வரலாற்றில் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போது பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின. ஆனாலும் அது அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கை வரலாற்றிலே பல்வேறு மாற்றங்கள் தோன்றின. இன்றைய நவீன இலங்கையின் மாற்றங்களுக்கு அவ்வாறான வாக்குரிமை மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
சர்வஜன வாக்குரிமையின் அறிமுகத்தால் பெண்களின் அரசியல் அறிவு வளர்ச்சி அடைய தொடங்கியது. அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர். பெண் அரசியல் தலைவர்களும் உருவாகினர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பெண் பிரதமராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா பெண் ஜனாதிபதியாகவும் இலங்கையில் இருந்து ஆட்சி புரிந்திருப்பதை காணலாம். பெண்கள் அரசியலில் ஈடுபட்டதால் பெண்கள் நலன்சார் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெண்களுக்கு என தனியான வைத்தியசாலைகள், மகளிர் பாடசாலைகள் நிறுவப்பட்டன. பெண்களுக்கு என தனி அமைச்சும் ஒதுக்கப்பட்டது. பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுவதற்கு சர்வஜன வாக்குரிமை தூண்டுகோலாக மாறியது.
சர்வஜன வாக்குரிமை செல்வாக்கு பெற்றதால் கட்சி முறை தோன்றியதனால் கட்சியில் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்க வேண்டி இருந்ததால் சாதி வேறுபாடு இன்றி கட்சி முறைகள் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தோன்றி வளர்ச்சி அடைந்திருந்தன. இன்று 60க்கும் மேற்பட்ட கட்சிகள் செயற்படுகின்றன.
சர்வஜன வாக்குரிமை சிறுபான்மையினருக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தியது. ஏனெனில் சிறுபான்மையினர் உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை காணலாம். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூக முன்னேற்றங்களும் விவசாய அபிவிருத்தி போன்றன தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவதால் பல திட்டங்கள் உருவாக வழி வகுத்தது. டி எஸ் சேனநாயக்கா மின்னேரியாத் திட்டத்தையும், உடவளவை திட்டத்தையும், கல்லோயா திட்டத்தினையும் கொண்டு வந்தார். C. W. W கன்னங்கரா இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். சில தீய விளைவுகளுக்கும் வழிவகுத்தது குறிப்பாக S. W. R. D பண்டாரநாயக்கா தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார். இதனை ஒரு பாதிப்பான நிகழ்வு என கருதலாம்.
D.Sசேனநாயக்கா சேனநாயக்க சமுத்திரத்தை உருவாக்கி இருந்தார். இது ஒரு சிறப்பான திட்டமாகும். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களும் மேல் நிலைக்கு வர உதவியது. சௌமிய மூர்த்தி தொண்டமான் R.பிறேமதாச முதலான அரசியல் தலைவர்கள் சர்வஜன வாக்குரிமையினாலேயே மேல்நிலை அடைய முடிந்தது. அதேவேளை லஞ்சம், ஊழல் முதலானவை அதிகரிக்க நேர்ந்ததோடு வாக்குகளை விற்றல், ஆலள்மாறாட்டம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதே வேளை ஜனநாயகம், மனித உரிமை முதலான கோட்பாடுகள் வளர்ச்சி அடையவும் வழி வகுத்தது. பின்னணியில் சுதந்திரம் பற்றிய எண்ணம் வளர்ச்சி அடையவும், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் வளர்ச்சி அடையவும் உதவியது. அதுமாத்திரம் அல்லாது சிறுபான்மையினருக்கு பாதிப்பான நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர் உள்ள இடங்களில் தேர்தலில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் காணப்பட்டது.
எனவே கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வஜன வாக்குரிமையானது இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தத்தோடு ஜனநாயக கோட்பாடுகள் வளர்ச்சி அடைய வழிவகுத்திருந்ததனையும் காணலாம்.
அரசுக் கழகம்
டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது அரசு கழகமாகும் இது மொத்தமாக 61 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இதில் 50 பேர் பிரதேச அடிப்படையில் அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் மூலம் 50தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் சார்பாக ஆள்பதி எட்டு பேரை நியமனம் செய்வார். அவர்களுடன் பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், நீதி செயலாளர், ஆகியோரை உள்ளடக்கி மொத்தம் 61பேரை உள்ளடக்கியதாக காணப்படும்.
அரசு கழகம் ஆனது சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரம் மிக்க மன்றாக செயற்படும். அரச துறையில் இலங்கைக்கு அனுபவம் கிடைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக விளங்கியது. எந்த ஒரு மசோதாவும் இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னரே சட்டமாக முடியும் ஆகவே சட்ட உருவாக்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மன்றாக இது விளங்கியது. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவர்கள் செய்யப்பட்டனர்.
ஏழு நிர்வாகக் குழு
டொனமூர் யாப்பில் ஏழு நிர்வாகக் குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுக் கழகத்தில் பிரதேச அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 50 பேரும் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேரும் உள்ளடங்கிய 58 பேரும் 7 நிர்வாக குழுவாக வகுக்கப்படுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் 6 தொடக்கம் 9 வரை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் அரசாங்க சேவை ஒழுங்காக இடம்பெறும் என டொனமூர் சிபாரிசு செய்தார்.
- சுகாதாரம்
- கல்வி
- விவசாயம், காணி
- வர்த்தகம், கைத்தொழில்
- உள்ளூராட்சி
- உள்நாட்டலுவல்கள்
- போக்குவரத்தும் பொது கட்டிட வேலையும்
No comments:
Post a Comment