தேசிய அரசுகளின் தோற்றம்
தேசிய அரசு என்றால் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும். அதாவது ஒரு நாட்டிலே ஆட்சியாளன் முழு விடயங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதோடு முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தன்மையே தேசிய அரசு ஆகும். தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். " அந்த வகையில் தேசிய அரசு கிபி 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் தோன்றிய புதிய வகையான அரசியல் முறை என்பதால் இதனை புதிய முடியாட்சி அல்லது புதிய வகை ஆட்சி முறை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பாவிலேயே முதலிலே தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய குறிப்பிடப்படுகின்ற போதிலும் அண்மைக்கால ஆய்வுகளின் படி இங்கிலாந்தே முதல் தேசிய அரசு எனக் குறிப்பிடுபவரும் உள்ளனர். அதன்பின்னர் பிரான்ஸ், போர்த்துகல், ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசுகளாக மாறின.
தேசிய அரசின் தோற்றத்திற்கான காரணங்கள்.
தேசிய அரசு என்பது புதிய முடியாட்சி ஆகும். அந்த வகையிலே கிபி 15 ஆம் நூற்றாண்டின் பின் எழுச்சி பெற்று வந்த வலிமையான ஆட்சி முறையே தேசிய அரசாகும். அதாவது வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். அவ்வாறு தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய தோன்றி பின் பிரான்ஸ் போர்த்துகல் ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசாக மாறின என கூறப்படுகிறது. தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக விளங்கியது என சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையிலே தேசிய அரசானது பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்களால் எழுச்சி பெற்றதெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
மானிய முறையின் வீழ்ச்சியின் பின் தோன்றிய மறுமலர்ச்சியானது அரசியல் ரீதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவ்வாறு ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்றாக தேசிய அரசின் தோற்றமும் குறிப்பிட முடியும். மறுமலர்ச்சி காலத்திலே புதிய அரசியல் சிந்தனைகள் தோன்றியது. அவ்வாறு தோன்றிய புதிய சிந்தனையானது அரசியல் உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியது. பிறப்புக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு அரசர்கள் வலிமை மிகுந்தவர்களாக மாறினார். இதனால் தேசிய அரசுகள் தோன்றின. குறிப்பாக ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மிகவும் பலம் வாய்ந்த தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.
பிரபுக்கள் சிற்றரசர்கள் தமது செல்வாக்கை குறைக்கும் நிலை உருவானது. அதாவது பிரபுக்களும் சிற்றரசர்களும் அரசர்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். வலிமை வாய்ந்த அரசர்கள் எழுச்சி பெற்றனர். இதன் காரணமாக இறைமை கொண்ட அரசு எழுச்சி பெற்றது. நாடுகான் பயணங்களின் தோற்றத்தினால் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வலிமை பெறத் தொடங்கினர். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்ட நாடுகளில் அரசர்கள் வலிமை பெற்றனர். குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பானியா, பிரான்ஸ் முதலிய நாடுகள் நாடுகான் பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்டன. இதனால் நிரந்தர படை மற்றும் உள்நாட்டு கட்டுமானங்கள் மற்றும் நிலையான அரசியல் நிலை வளர்ச்சி அடைந்தன. இதன் காரணமாக தேசிய அரசுகளாக இந்நாடுகள் உதயமாகின.
இங்கிலாந்து பிரான்ஸ் ஸ்பானிய முதலான நாடுகளில் வலிமை பெற்ற ஆட்சியாளர்கள் எழுச்சி பெற்றமை தேசிய அரசின் தோற்றத்திற்கு காரணமாக விளங்கியது. அதாவது இங்கிலாந்திலே ஏழாம் ஹென்றி, எட்டாம் ஹென்றி, எலிசபெத் மகாராணி, போன்றோர் பிரான்சிலே மூன்றாம் சாள்ஸ், நான்காம் ஹென்றி, பதினொராம் லூயி, 14ஆம் லூயி போன்றோரும் பானியாவிலே தேடினேன் அவனது மனைவி இசபெல்லா, ஐந்தாம் சாள்ஸ் போன்றோரும் இந்நாடுகளின் எழுச்சிக்கு பெரிதும் உதவினர். இதேவேளை அந்த அரசர்களுக்கு கிடைத்த நல்ல அமைச்சர்களும் அவற்றின் வெற்றிக்கு உதவினர். நான்காம் ஹென்றியின் அமைச்சர் சல்லி கோமானார், எட்டாம் ஹென்றியின் அமைச்சரான கர்தினால் ஊல்கி, 14ஆம் லூயியின் அமைச்சரான கொல்பேட், லூவோ போன்ற அமைச்சர்களும் அரசர்களுக்கு வாய் தமையும் அரசர்கள் சிறந்த அறிவாற்றலும் வலிமையும் கொண்டு பெற்றமை தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தன.
சமய சீர்திருத்தத்தின் தோற்றத்தினால் சமயம் வேறு அரசியல் வேறு என்கிற நிலை தோன்றியது. இதனால் சமய ரீதியான அடக்கு முறையும் ஆதிக்கமும் குறைவடைந்தது. மதகுருமார் போப்பாண்டவர் போன்றோரின் அதிகாரமும் செல்வாக்கும் குறைவடைந்தது. அது மாத்திரமில்லாது பரிசுத்த உரோமப் பேரரசு முறைமை செல்வாக்கிழந்து போனமை இதனால் அரசர்கள் வலிமை பெற்று தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன.
விஞ்ஞான வளர்ச்சி தோன்றியமையால் அரசியல் வளர தொடங்கியது. குறிப்பாக உலகம் உருண்டை என்ற கோட்பாடு செல்வாக்கு பெற்று தேசிய உணர்வு வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில் அறிவியல் வளர்ச்சியால் பல பல்கலைக்கழகங்கள் தோன்றியது. மக்கள் கல்வியறிவு உள்ளவர்களாக மாறினர் அரசியல் அறிவும் வளர்ச்சி அடைந்தது. இதனால் தேசிய அரசுகள் தோன்றின. 'இளவரசன்' (The Prince) என்ற நூலை எழுதிய மாக்கியவல்லி அரசனின் தந்திரம் மக்களின் வாழ்க்கை முறை முதலானவற்றை கூறினார். இதனால் தேசிய அரசு பற்றிய எண்ணக் கோட்பாடுகள் வளர்ச்சி அடைந்தன. ஜீன் போடின் முன்வைத்த கோட்பாடும் மக்களை சிந்திக்க செய்தது. இவ்வாறு மாக்கியவல்லி, ஜீன்போடின் போன்றோரின் சிந்தனைகளும் தேசிய அரசின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
ஜோன்கூட்டன்பேர்க் அச்சியந்திரத்தை கண்டுபிடித்ததை தொடர்ந்து பத்திரிகை, துண்டுப்பிரசுரம், புத்தகம் போன்றன அச்சடிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் அரசியல் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இதனால் அரசியல் அறிவு வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தேசிய அரசுகள் எழுச்சி பெற்றன. பொருளாதார உற்பத்தி போட்டி, நாடுகான் பயணம், வணிகவாதம், கைத்தொழில் புரட்சி முதலானவையும் தேசிய அரசின் தோற்றத்தை ஊக்கப்படுத்தியது. அதாவது வணிக ரீதியாக பொருட்களை பெறுவதிலும் தமது பொருட்களை விற்பனை செய்வதிலும் போட்டி ஏற்பட்டபோது பல நாடுகள் பிறநாடுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றன. இதனால் தேசிய அரசுகள் எழுச்சி அடைந்தன. தேசிய அரசின் தோற்றத்திற்கு ஆயுத உற்பத்தி மற்றும் நிரந்தர படைகளின் உருவாக்கம் என்பனவும், காரணமாகியது எனலாம். அதாவது நாடுகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக நாடுகள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்காக நிரந்தரப் படைகளை உருவாக்கிக் கொண்டதோடு ஆயுத ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக கடற்படை, தரைப்படை போன்றவற்றை பலப்படுத்தினர். புதியரக ஆயுதங்கள், வெடி மருந்துகள் துப்பாக்கிகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டதால் ஒவ்வொரு அரசும் பலம் பெற தொடங்கியமையும் தேசிய அரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
நாடுகளில் தேசிய ரீதியாக மொழி ரீதியான சிந்தனைகள் வளர்ச்சி அடைந்தபையும் தேசிய மொழி, தேசிய மொழி பற்று ஏற்பட்டமையும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இதேவேளை இன ரீதியான ஒற்றுமை ஏற்பட்டமை, மொழி, மதம் போன்ற அடிப்படைகளிலே ஏற்பட்ட ஒற்றுமையும் நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற வழி வகுத்தன. அதுமாத்திரமல்லாது வணிகம், கைத்தொழில் போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்ததால் மத்தியதரவர்க்கம் எழுச்சி அடைந்தது. மத்திய தர வர்க்கத்தின் எழுச்சி காரணமாக மானியமுறை காலத்திலேயே செல்வாக்கு பெற்றிருந்த பிரபுக்கள் செல்வாக்கு குறைவடைந்தது. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்கள் போன்றோரின் செல்வாக்கு குறைவடைந்தமையும் மத்தியதரவர்க த்தின் எழுச்சி காரணமாக ஏற்பட்ட மாறுதல்களும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக அடிமை முறை வீழ்ச்சி அடைந்து அறிவு கொண்ட ஒரு சமூகம் எழுச்சி பெற்றது. அரசியல் சிந்தனைகள் மற்றும் கிரேக்க உரோம சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட நவீன அரசு பற்றிய சிந்தனைகள் எழுச்சி அடைந்தமையும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழி வகுத்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் இறைமை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அரசுகள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்றமையைக் காணமுடிகிறது.
No comments:
Post a Comment