Tuesday, 4 July 2023

தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த முக்கியமான துறையாக விளங்குவது இலக்கியத்துறை ஆகும். அவ்வாறு இலக்கிய துறை வளர்ச்சி அடைந்ததால் இலங்கையிலே அறிவு பாதுகாக்கப்பட்ட காலமாக புகழப்படுகிறது. இங்கே,

               1. மன்னர்களின் ஆதரவு.

               2. பிரிவினாக்களின் எழுச்சி.

               3. அறிஞர்களின் செயல்பாடு.

               4. இலக்கிய வளர்ச்சி.

என்பன இக்காலத்தில் கல்வி, கலாச்சார துறையின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியதை காணமுடிகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் அவரது தந்தையாரான மூன்றாம் விஜயபாகு போன்றோரின் பணிகளிலே இத்தகைய எழுச்சி நிலை ஏற்பட்டது.


 மாகனது படையெடுப்பை தொடர்ந்து பொலநறுவை இராசதானி வீழ்ச்சி அடைந்தது. இதனால் இலக்கிய துறையிலே பெரிய அழிவு தோன்றியது. அவ்வேளையில் கல்வித்துறையை வளர்ப்பதில் மூன்றாம் விஜயபாகு ஆர்வம் செலுத்தினான். அந்த வகையிலே அழிந்த இலக்கியங்களை புதுப்பித்து எழுதுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். அந்த வகையில் அழிந்த இலக்கியங்களைத் தேடி எடுத்து தொகுத்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் இலக்கியங்களையும் பெற்றுக் கொண்டான். அது மாத்திரம் அல்லாது மாகனின் படையெடுப்பால் தப்பி ஓடிய அறிஞர்களை மீளவும் தம்பதெயனியாவிற்கு வரவழைத்து இலக்கியப் பணிகளில் ஈடுபடச் செய்தான். "விஜயசுந்தரராமய" என்ற கட்டிடத்தை நிறுவி அங்கே பிரிவெனா கல்வியை நடைபெறச் செய்தான். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பௌத்த பிக்குகளை வரவழைத்து கல்வி மேம்பாட்டுக்கு உதவினான். இவனது முயற்சியால் இலக்கிய துறை பாதுகாக்கப்பட்டது. சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இலக்கியங்கள் எழுச்சி பெற்றது.


 மூன்றாம் விஜயபாகுவின் பின் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மேலும் பல பணிகளை ஆற்றி இலக்கிய துறையை பலப்படுத்தினான். அந்த வகையிலே தந்தையாரைப் போன்று இலக்கியங்களை புதுப்பித்ததோடு பல இலக்கியங்களையும் எழுதினான். அந்த வகையில்,

  • வனவினி சன்னத
  • விசுத்தி மார்க்க மகா சன்னத
  • கவிசிலுமின

ஆகிய நூல்களை ஆக்கியிருந்தான். மூன்று மொழிகளிலே சிறந்த ஆற்றல் உள்ளவனாக விளங்கினான். பாளி, சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்த இவன் விசுத்தி மார்க்க என்ற பாளி இலக்கியத்திற்கு விளக்க உரை எழுதி விசத்தி மார்க்க மகாசன்னத என வெளியிட்டார். அத்துடன் தான் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிசிலுமின என்ற நூலாக வெளியிட்டார். அந்த வகையிலே இவன் "கலிகால சாகித்திய சர்வஞான பண்டிதன்" என அழைக்கப்பட்டான். மயூரபாத பிரிவெனா, நந்தன பிரிவெனா, பிரதிராஜ பிரிவெனா, வத்தல பிரிவெனா உள்ளிட்ட பல்வேறு பிரிவினாக்களை நிறுவி கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றினான். "சந்தர்மரத்னாவலிய" என்ற நூலை எழுதிய தர்மசேனதேரர் மற்றும் "பூஜாவலிய, ஜோகார்ணய" போன்ற நூல்களை எழுதிய புத்தமித்திர தேரர் போன்றோர் இவனது அரண்மனையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.  அத்துடன் இக்கால பகுதியில் பல்வேறு இலக்கியவாதிகள் வாழ்ந்து இலக்கிய துறை வளர்ச்சியில் பங்காற்றியதாக தெரிய வருகிறது. அதுமாத்திரம் அல்லாது பிக்குகளும் பிக்குகள் அல்லாதவர்களும் கல்வி கற்க கூடிய வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த வகையிலே "போதற்ய மருந்தகா, ரசவாகினி, சமந்தகூட வண்ணை, தைவக்ஞ காமதேனு, பயோதசித்தை, ஜீனாசரிதம், சிதத்சங்கராவ உள்ளிட்ட பல நூல்கள் இக்காலப்பகுதியில் எழுந்ததாக கூறப்படுகிறது.


 வெதேகதேரர் - "ரஸவாகினி, சமந்தகூடவண்ண, சிதத்சங்கராவ" போன்ற நூல்களை எழுதினார். இங்கு இலக்கண நூல்களும், வைத்திய நூல்களும் எழுந்ததாக தெரியவருகிறது. அந்த வகையில் "ஜோவர்நய" வைத்திய நூலும் "சிதத்சங்கராவ" இலக்கண நூலாகும். இவற்றை விட "லோகார்நய சங்கதா" ஒரு வைத்திய நூலும் ஆகும்.


 எனவே மேற்கூறப்பட்ட வகையில் தொகுத்து நோக்கும் போது தம்பதெனிய காலம் இலக்கியத்துறையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளமையை காண முடிகின்றது. 

ஆறாம் பராக்கிரமபாகு

ஆறாம் பராக்கிரமபாகு

கிபி (1412-  1461 )

 கோட்டை காலத்தில் முதல் மன்னனாக குறிப்பிடப்படுபவன் ஆறாம் பராக்கிரமபாகு ஆவான். இவன் கிபி 1412க்கும் 1415க்கும் இடையில் ஏதோ ஒரு ஆண்டில் அரசனாக முடிசூடி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவன் கிபி 1461 வரை அரசனாக இருந்தான் .இலங்கையில் அரசியல், கலாச்சார, பொருளாதார விடயங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தினான் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவன் றைகம பகுதியில் அரசனாக இருந்தான். இதனால் இவனை றைகம பராக்கிரமபாகு என அழைத்தனர். பின்னாளிலே தியவன்ன ஓயா கரையில் கோட்டை ஒன்றை நிறுவி அங்கே தனது தலைநகரத்தை மாற்றிக் கொண்டான். இதன்பின் அவன் கோட்டை பராக்கிரமபாகு என அழைக்கப்பட்டான். இவனது வரலாறு பற்றி அறிவதற்கு "பரகும்பாசரித" என்ற நூலும் தொல்பொருள் சான்றுகளும் மேலும் பல இலக்கியங்களும் சான்றுகளாக உள்ளன.


 ஆறாம்  பராக்கிரமபாகு பற்றி அறிகின்ற போது சீன தளபதியான செங்கோ என்பவன் இலங்கையை கைப்பற்றி இலங்கையிலே சீனரது ஆட்சியை நிலைநிறுத்தி சென்றதைத் தொடர்ந்து சீனரது செல்வாக்கு மேலோங்கி காணப்பட்டது. அவ்வேளை சீனரிடம் இருந்து நாட்டை மீட்டு இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்கிய பின் சிறந்த ஆட்சியை மேற்கொண்டான். அந்த வகையில் இலங்கை முழுவதையும் ஒன்றிணைத்த இறுதிச் சிங்கள மன்னன் என்ற வகையில் சிறப்பிடம் பெற்றான். ஆரம்பத்தில் வன்னிய சித்தரசர்களை அடக்கியதோடு மலையாக ராஜ்ஜியத்தில் ஆட்சி புரிந்த பராக்கிரமஆபா என்பவனை வெற்றிகொண்டு மலையக ராஜ்ஜியத்தையும் தனது ராஜ்ஜியத்துடன்  இணைத்து கொண்டான். அதுமட்டுமல்லாது வலிமை வாய்ந்த அரசு ஒன்றை உருவாக்கினான். இக்காலப் பகுதியில் தென்னிந்தியாவை ஆட்சி புரிந்த நாயக்க வம்ச மன்னனான இரண்டாம் தேவராஜன் என்பவன் தனது படைகளுடன் கோட்டை இராஜ்ஜியம் நோக்கி படையெடுத்துச் சென்று ராஜ்ஜியத்தை கைப்பற்றி பெருந்தொகை செல்வங்களையும் சூறையாடி திரும்பி சென்றான். அவ்வேளை நாயக்க வம்ச அரசனுக்கு யாழ்ப்பாண அரசனும் துணை புரிந்தான். இதனால் ஆத்திரமடைந்த ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்க திட்டமிட்டான். ஆனாலும் நாயக வம்ச மன்னனின் உதவி யாழ்ப்பாண அரசனுக்கு இருந்ததால் அந்த நடவடிக்கையை ஆறாம் பராக்கிரமபாகு கைவிட்டான்.


ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு இரண்டு தளபதிகள் காணப்பட்டனர். அவர்கள் இவனது வளர்ப்பு மகன்களான சப்புமல் குமாரன், அம்புலுகல குமாரன் ஆகியோர்கள் ஆவர். இவர்களின் ராஜ விசுவாசமும் ஆறாம் பராக்கிரமபாகு மீதான பற்றும் சிறந்த அரசியல் நிலை உருவாக்குவதற்கு வழி வகுத்தது.


 கிபி 1449 ஆம் ஆண்டளவில் மாலிக்கபூர் என்ற இஸ்லாமிய தளபதி ஒருவன் பெரும் படைகளுடன் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து நாயக்கர்களை தோற்கடித்தான். இதனால் நாயக்கர்கள் தோல்வியடைந்து பலவீனம் அடைந்தனர். இதனை அறிந்த ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்குமாறு கட்டளையிட்டான். யாழ்ப்பாணம் நோக்கி படையெடுப்பை மேற்கொண்ட சப்புமல்குமாரன் கோட்டையில் இருந்து படைகளுடன் புறப்பட்டு இலங்கையின் மேற்கு திசையில் நகர்ந்து மாந்தைப் பகுதியை சென்றடைந்ததன் பின் வன்னிய சிற்றரசர்களுடன் மோதல் ஏற்பட்டது. அவர்களை ஒவ்வொருவராக வெற்றி கொண்டு பூநகரியை அடைந்து பின் அங்கிருந்து ஆனையிறவை அடைந்து ஆனையிறவின் ஊடாக யாழ்ப்பாண பகுதிக்குள் நுழைந்த போது சாஹவர் கோட்டை பகுதியில் நின்ற சாஹவர் படைகளை தோற்கடித்த பின் யாழ்ப்பாண பகுதிக்குள் நுழைந்த சப்புமல் குமாரன் தலைமையிலான படைகள் யாழ்ப்பாண அரசனாக இருந்த கனக சூரிய சிங்கை ஆரியனை வெற்றி கொண்டு யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்டான். இவ் வெற்றி குறித்து ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு தெரியப்படுத்திய போது யாழ்ப்பாண ஆட்சியாளனாக சப்புமல் குமாரனையையே நியமித்தான்.


 சப்புமல் குமாரன் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாபு என்ற பெயரில் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தான் என தெரிய வருகிறது. தோல்வி அடைந்த கனக சூரிய சிங்கை ஆரியன் இந்தியாவிற்கு தப்பிச்சென்று நாயக்க மன்னனிடம் தஞ்சம் அடைந்தார். இது பற்றி "கோகில சந்தேசய" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


 சப்புமல் குமாரன் யாழ்ப்பாணத்தில் அரச பதவி ஏற்றிருந்த வேளையில் கண்டி ராஜ்ஜியத்தில் கலவரம் ஒன்று தோன்றியது ஜோதிய சீடான என்பவன் கண்டியை கைப்பற்றியதோடு கோட்டை ராஜ்யத்தையும் கைப்பற்ற முனைந்தான். அவளையில் அம்புலுகலகுமாரன் என்பவன் பராக்கிரமபாகுவின் படைகளுக்கு தலைமை தாங்கி ஜோதிய சீடானவின் படைகளுக்கு எதிராக போர் புரிந்தான். சிறப்பாக போர் புரிந்து தனது திறமையால் ஜோதிய சீடானவை வெற்றிகொண்டு கண்டிராச்சியத்தை மீண்டும் கைப்பற்றினான். ஆறாம் பராக்கிரமபாகு கண்டி ராஜ்ஜியத்தில் தனக்கு சார்பாக அம்புலுகல குமாரனை நியமித்தான். இவ்வாறு இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரமபாகு பொருளாதார, கலாச்சார ரீதியிலும் நாட்டை ஒன்றிணைத்தான்.


 ஒருமுறை கம்போடிய நாட்டிற்கு வணிக நடவடிக்கையின் பொருட்டு இலங்கையில் இருந்து சென்ற கறுவா கப்பலை தென்னிந்தியாவில் நாயக்க வம்ச மன்னனான மாளவராஜன் என்பவன் கடலிலே மறித்து கொள்ளையடித்தான். இதனால் ஆத்திரமடைந்த பராக்கிரமபாகு தென்னிந்தியா நோக்கி படையெடுத்து நாயக்கரின் ஆட்சியின் கீழ் இருந்த அதிவீரராம பட்டினம் என்ற இடத்தை கைப்பற்றி அங்கிருந்து திறை பெற்று திரும்பினான் எனக் கூறப்படுவதன் மூலம் இந்தியா நோக்கி படையெடுத்து வெற்றி பெற்ற மன்னனாகவும் ஆறாம் பராக்கிரமபாகு சிறப்பிக்கப்படுகிறான்.


 ஆறாம் பராக்கிரமமாக அரசியல் ரீதியாக நாட்டை ஒன்றிணைத்த பின்னர் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான். பௌத்த சமயத்தை பாதுகாப்பதிலும் பௌத்த சடங்குகளை நடத்துவதிலும் ஆர்வம் செலுத்தினான். களனி ஆற்றங்கரையிலே உபசம்பதா நிகழ்வை நடத்தியதோடு கோட்டையில் ஒரு பாதுகாப்பு அரணை அமைத்தான். அதற்கு அருகிலே தந்ததாது விகாரை ஒன்றை நிறுவி அங்கே புத்தரது பற்சின்னத்தை வைத்து வழிபடச் செய்தான். பிரிவெனா கல்வியை மீளவும் வளர்த்தெடுத்தான். அந்த வகையிலே பத்மாவதி பிரிவெனா, சுனேத்திராதேவி பிரிவெனா, ஸ்ரீகனானந்த பிரிவெனா இருகல்குல திலக பிரிவெனா, விஜயபாகு பிரிவெனா உள்ளிட்ட பல பிரிவெனாக்களை நிறுவி கல்வி சேவையை விருத்தி செய்தான். சமஸ்கிருதம், பாளி, சிங்களம் போன்ற மொழிகளை ஆதரித்ததோடு அறிஞர்களையும் புலவர்களையும் பிக்குகளையும் ஆதரித்தான். ஏராளமான செல்வங்களை வழங்கி கல்வித்துறையை மேம்படுத்தினான். அத்துடன் இவரது முயற்சியால் பல இலக்கியங்கள் உருவாகின. ரூவான்மல என்னும் இலக்கியம் இவனால் உருவாக்கப்பட்டது. இதனை விட பரகும்பாசரித என்ற நூல் இவனது வரலாறு பற்றி கூறுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.


 ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அவன் "உபுல்வன்" என்ற இந்து கடவுளுக்கும் கோயில் அமைத்தான் என கூறப்படுகிறது. அது மாத்திரமல்லாது அவனது ஆட்சியின் முடிவிலே கோட்டையில்  ஆறாம் பராக்கிரமபாககுவும், கண்டியில் அம்புலுகலகுமாரனும், யாழ்ப்பாணத்தில் சப்புமல் குமாரனும் ஆட்சி புரிந்தனர். இலங்கை பின்நாளில் மூன்று ராஜ்ஜியமாக மாறுவதற்கு இவனே அடிகோலினான் எனவும் தெரிய வருகிறது.


 எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது ஆறாம் பராக்கிரமபாகு மிகச்சிறப்பான முறையிலே விளங்குவதோடு இலங்கை முழுவதையும் ஒன்றிணைத்து ஆட்சி புரிந்த கடைசி மன்னனாகவும், பல்வேறு சிறப்புகளையும் ஏற்படுத்தி நாட்டை பாதுகாத்த மன்னன் ஆகவும் விளங்குகின்றான்.

Saturday, 17 June 2023

O/L (க. பொ. த சாதாரண தர) படவேலை பயிற்சி

க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு உரிய படவேலை பயிற்சி கீழ் தரப்பட்டுள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. 


     Click and download pdf👇👇👇

                 Click here

Friday, 16 June 2023

பிரித்தானியர்கள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தியமைக்கான காரணங்கள்

பிரித்தானியர் காலம் (1796 - 1948)


 பிரித்தானியர் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த காரணம.


 இலங்கையின் கரையோர பகுதிகளில் ஒல்லாந்தர் தங்கி இருந்த காலப்பகுதியில் பிரித்தானியர் இந்தியாவில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். குறிப்பாக சென்னை, கல்கத்தா, கர்நாடகா உட்பட பல பகுதிகளில் பிரித்தானியர் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களின் ஆதிக்க விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை தேவைப்பட்டது. இதனால் இலங்கை மீது பிரித்தானியர்கள் கவனம் செலுத்த தொடங்கினர்.


 இலங்கை மீது பிரித்தானியர் கவனம் செலுத்தியமைகாண காரணங்கள்.


 இந்து சமுத்திர பிராந்தியத்திலே இலங்கை மிகவும் முக்கிய இடத்தில் அமைந்து இருப்பதால் அதனை கைப்பற்றுவதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தலாம் என பிரித்தானியர் கருதினர். இதனால் இலங்கையை கைப்பற்ற விரும்பினர்.


 இலங்கையிலே காணப்பட்ட மிகவும் பாதுகாப்பானதும் இயற்கை அருண் கொண்டதுமான திருவோணமலை துறைமுகத்தை தமது ஆதிக்க திங்கள் கொண்டு வருவதன் மூலம் ஆசியா கண்டத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளலாம் என பிரித்தானியர் கருதினர்.


 இந்தியாவிலேயே பிரித்தானியருக்கு எதிராக செயற்பட்ட பிரான்சியரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் பிரான்சியர் இலங்கையை கைப்பற்றினால் அது தமக்கு ஆபத்தாகிவிடும் என கருதியும் இலங்கையை கைப்பற்ற விரும்பினர்.


 வாணிப ரீதியாக இலங்கை கறுவா, மிளகு, ஏலக்காய் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களையும் பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இரத்தினக்கல், முத்து போன்ற விலை உயர்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளவும் இலங்கை ஏற்புடையதாக இருந்ததால் இலங்கையை தம் வசப்படுத்திக் கொள்ள விரும்பினர்.


 மேற் கூறப்பட்ட காரணங்களினால் இலங்கை மீது பிரித்தானியர் ஆதிக்கம் செலுத்த விரும்பிய போது இலங்கையின் கண்டி இராஜ்யத்தில் இருந்த அரசர்கள் இந்தியாவிலிருந்த பிரித்தானியர்களின் உதவியை நாடி இலங்கை பகுதியிலிருந்து ஒல்லாந்தரை வெளியேற்றிக் கொள்ள விரும்பினர். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனை சந்தித்த ஜோன் பைபஸ் (1762) கண்டி அரசனுக்கு உதவுவதாக கூறிய போதிலும் பிரித்தானியர்கள் கண்டி அரசனுக்கு உதவ முன் வரவில்லை.


 இராஜாதி ராஜசிங்கன் கண்டி இராசதானிக்கு அரசனாக இருந்தபோது கியூபொயிட் (1982), றொபேட் அண்றறூஸ் (1795) போன்றோர் கண்டி அரசனுடன் தொடர்பு ஏற்படுத்திய போதிலும் அவர்களும் அக்காலத்தில் ஒல்லாந்தருடன் பிரித்தானியர் நல்லுறவை பேணியதன் காரணமாக கண்டிய அரசனுக்கு உதவவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் 1794 பிரான்சில் அரசனாக இருந்த நெப்போலியன் போனபார்ட் ஒல்லாந்து மீது போர் தொடுத்த வேளை ஒல்லாந்து இளவரசனான ஒரேஞ்ச் வில்லியம் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று தஞ்சம் கோரினான்.


 அவ்வேளை இலங்கையில் உள்ள ஒல்லாந்த தேச தேசாதிபதியாக இருந்த பன் எங்கல் பெக் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பிரித்தானியர்கள் 1794இன் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர்களிடம் இருந்து தாக்கி இலங்கையை கைப்பற்ற முயன்றனர். 1796 இல் முற்று முழுதாக இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றி கொண்டனர்.

Thursday, 25 May 2023

குப்தப் பேரரசின் தோற்றம்

இந்தியாவில் காணப்பட்ட குப்தப் பேரரசின் தோற்றம் மற்றும் அவ் அரசில் முக்கியமான மன்னர்கள் பற்றிய தகவல்கள் கீழ் வரும் காணொளியில் தரப்பட்டுள்ளது.



              Click and watch this vedio 👇👇👇



Wednesday, 24 May 2023

இலங்கையின் தேசிய இயக்கமும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் போது ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள்


இலங்கையின் தேசிய இயக்கம் மற்றும் கோல்புறுக் கமரன் யாப்பு பற்றிய முக்கிய அம்சங்கள் தரப்பட்டுள்ள காணொளியில் உள்ளடங்கியுள்ளது.


            Click and watch this vedio 👇👇👇





     பிரித்தானியரது காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை உட்பட்டிருந்த  வேளை பிரித்தானியர்களால் பல்வேறு அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில்  கிபி 1910 குறூ மக்கலம் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1921 மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1924 மனிங் டெவன்ஸியர் அரசியல் யாப்பு சீர்திருத்தம், கிபி 1931 டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஆகியவை முக்கியமானவை. அவற்றில் உள்ளடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கீழ்வரும் காணொளியில் தரப்பட்டுள்ளன.


            Click and watch this vedio 👇👇👇





சோல்பரி யாப்பு

இலங்கையில் கி. பி 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி யாப்பில் உள்ளடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கீழ் வரும் காணொளியில் இடைக்கப்பட்டுள்ளன.



          Click and watch this vedio 👇👇👇



பிரித்தானியர் கால ஆட்சியினால் இலங்கையில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் அல்லது தாக்கங்கள்



  பிரித்தானியரது ஆட்சியினால் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் பற்றிய விடயங்கள் கீழ் தரப்பட்ட காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன.


              Click and watch this vedio 👇👇👇



 பிரித்தானியர் ஆட்சிக்கால இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களில் ஒன்றான கல்வி பற்றிய மாற்றங்களும், உள்நாட்டின் சமய கலாசார மறுமலர்ச்சி தொடர்பான விடயங்களும் கீழ்வரும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன.


           Click and watch this vedio 👇👇👇



மறுமலர்ச்சியின் அம்சங்கள்

ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக வளர்ச்சி கண்ட துறைகளும் அவற்றில்  ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் கீழ் தரப்பட்ட காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன.


 Click and watch this vedio 👇👇👇


மகா பராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்லன்

இரஜரட்டை நாகரிக மன்னர்களான மகாபராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்லன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் அவர்களது சாதனைகளும் கீழ்வரும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன.


           Click and watch this vedio 👇👇👇



கல்விக்கான வரைவிலக்கணங்கள் - Definition ls for Education

கல்வி

 சோக்கிரட்டீஸ்

"தன்னை பற்றி விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அறிவை வழங்கும் செயன்முறையை கல்வி ஆகும். "


 பிளேட்டோ

 "நல்ல மனிதர்களை உருவாக்குவதும் அவர்கள் நல்ல முறையில் செயலாற்ற வழி வகுக்கும் செயன்முறையே கல்வியாகும். "


ஜோன்டூயி

 "அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மீளமைப்பதும் கல்வியாகும்."


ரூஸோ

 "இயற்கையோடு ஒட்டியதாக தோன்றும் செயன்முறையே கல்வியாகும்."


அல்பிரட் லைட்ஹெட்

 "அறிவை செயன்முறையாக்கப் பயன்படுத்தும் கலையை கைப்பற்றி கொள்ளுவதாகும். "


பேர்ட்ரன்ட் ரஸல்

 "தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பத்தை வழங்கி தடைகளை விலக்கி கலாசார அருங்கொடைகளை ஒப்படைத்து சமூகத்திற்கு பயனுள்ள தனியாளை உருவாக்குதல். "


காந்தி

"கல்வி என்பது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் சிறந்ததை வெளிக்கொணரும் ஒரு செயன்முறை."


எல்ட் ஹக்ஸி

"பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், விளக்கம் என்பவற்றை வெளிக்கொண்டு வரும் செயற்பாடு. "


Max wing

 "கல்வி என்பது ஒரு நடைமுறைச் செயன்முறையாகும். "


பீட்டர்ஸ்

" நீங்கள் ஒருவருக்கு பெருமதியை பெற்றுத்தரும், அறிவாற்றல், விளக்கமானது பூரண மனிதனை உருவாக்குகிறது. "


T. Aneja

"மனிதன் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக சக்திகளை விருத்தி செய்யும் செயன்முறையாகும்."


ரவீந்திரநாத் தாகூர்

 "கல்வி என்பது சமாதானத்தை விருத்தி செய்வதும் மனிதனது ஒற்றுமையை போசிப்பதுமான ஒரு செயன்முறையாகும்."


Mathur & Thadani 

"கல்வி என்பது மாணவரின் முழுமையான விருத்தியை குறிக்கோளாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட கலைத்திட்டத்தின் ஊடான முறை சார்ந்த மற்றும் முறை சாராத முறைகளைக் கொண்ட நீடித்த செயன்முறை."



ஐக்கிய நாடுகள் சபை - United Nations

உலக அமைதி பேண உருவாக்கபட்ட ஐக்கிய நாடுகள் சபை பற்றிய முக்கியமான விடயங்களின் தொகுப்பு.

           

                          Click 👇🏻👇🏻


                            (Pdf)

ரஷ்ய புரட்சி - Rusia War

ரஷ்ய புரட்சி 

ரஷ்யாவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட இப் புரட்சியானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப் புரட்சி  பற்றிய ஒரு கண்ணோட்டம்.


👇🏻👇🏻👇🏻 Click

    (Pdf)

இலங்கைக்கு பொருத்தமான கல்வியும் எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களும். (Education appropriate for Sri Lanka and the changes that need to be made in the future.)


  மனித குலத்தின் வளர்ச்சி படியின் முக்கிய அங்கமாக கல்வி அமைந்துள்ளது. இக்கல்வி ஒருவரை சமூகத்தில் சிறந்த பிரஜையாக்குவதை நோக்காகக் கொண்டே அமைகிறது. தற்கால இளைய சமுதாயம் நாளைய உலகின் தூண்களாக வியாபித்து செல்வார்கள். அவ்வாறான இளையவர்களுக்கு கல்வி வழங்குவதை முக்கிய பணியாக அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெடுப்பதைக் காணலாம். அந்த வகையில் இலங்கையில் வழங்கப்படும் கல்வி முறையானது காலத்திற்கு காலம் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் நாளைய சமுதாய வளர்ச்சிக்காக மேலும் வினைத்திறன் கொண்ட பல விடயங்களை உள்ளீர்க்கவும் சில விடயங்களை தவிர்க்கவும் வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
       அந்த வகையில் பல சிறந்த அம்சங்கள் இலங்கை கல்வி முறைமையில் காணப்பட்ட போதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துதல் சிறந்தது எனக் கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் பெரும்பாலும் கல்வி என்பது ஒரு பிள்ளை தனது மூன்று வயதிற்குள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் உறவினர்களது காப்பை விடுத்து முன்பள்ளி என்ற அமைப்பில் இணைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பிள்ளை ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, உயர் கல்வி எனத் தொடர்ந்து செல்வதனை குறிப்பிட முடியும். ‘பிள்ளை ஆரம்ப வயதுகளில் தாயுடனும், அனுபவத்துடனும் கற்க வேண்டியது அவசியம். அது பிள்ளையின் மனவெழுச்சி வளர்ச்சிக்கு உதவும்’ என மரியா மொண்டசூரி அம்மையார் கூறுகிறார்.
       தற்கால உலகு மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனை எதிர்கொள்ளவும் தன்னை ஒரு வினைத்திறன் உள்ளவனாகிக்கொள்ளவும் கல்வி வழிவகுப்பதாக அமைய வேண்டும். அதாவது தொழில்நுட்பத்தில் ஈடு இணையற்ற வளர்ச்சியை தற்காலம் சந்தித்துள்ளது எதிர்காலத்தில் இன்னும் மாற்றம் பெறும் என்பது தெரிந்த விடயம். எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் சமூகத்தில் சிக்கல் இன்றி வாழ தொழில்நுட்ப கல்வியை மேலும் விரிவுபடுத்த வேண்டியது தேவையாக மாறியுள்ளது. அடிப்படை தொழில்நுட்பம் போதிப்பதோடு மட்டுமல்லாது பிரயோக அடிப்படையிலும் சமூகத் தேவைகளை அல்லது தமது தேவைகளை நிறைவேற்றக்கூடியவாறு தொழில்நுட்பக் கல்வியை அமைக்க வேண்டும். மேலும் புத்தாக்கக் கல்வியை ஏற்படுத்த வேண்டியது இலங்கை கல்வி முறையில் எதிர்பார்க்கப்படும் மாற்றமாகக் காணப்படுகிறது. அதாவது உலகத் தளத்தில் இலங்கை இன்றும் வளர்ந்து வரும் நாடாகவே காணப்படுகின்றது. அத்தோடு சமகாலத்தில் பல்வேறு நிதி> நிர்வாக நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றது. இந்நிலைமைக்கு தீர்வு காண மாணவர்களுக்கு தனியே அறிவை கடத்தாது புத்தாக்கத்தை தூண்டவும் படைப்பாக்கக் கல்வியையும் வழங்க வேண்டும். மாணவர்கள் புத்தாக்கங்களை படைக்கும் போது அது நமது சமுதாயத்தையும் நாட்டையும் உயர்த்த வழிவகுக்கும். உதாரணமாக, சிறந்த கல்வி எனக் கூறி பல மாணவர்கள் வெளிநாட்டில் சென்று கற்கின்றனர். அவ்வாறான கல்வியை இலங்கை கல்வி முறைமையில் ஏற்படுத்தும் போது புத்திசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும்.
       மேலும் இலங்கை கல்வி முறையில் பிரயோகக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். சில பாடங்களில் இம்முறை காணப்பட்டாலும் அது எந்த அளவு செயல்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியே. ‘கல்வி என்பது ஒரு நடைமுறை செயல்முறை ஆகும்’ என்ற மக்ஸ் வின்க்ஸ் என்பவரது கருத்து போல வேறு பலரின் கருத்துக்களும் அனுபவம் ஊடாக கற்பிப்பதே சிறப்பான, நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது. எனவே தனியே வகுப்பறை அல்லது கோட்பாட்டுக் கற்றலை விடுத்து பிரயோக கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தோடு தனியே பரீட்சைக்கு தயார் செய்தலையே பெரும்பாலும் இலங்கை கல்வி முறை கொண்டுள்ளது. உதாரணமாக> பரீட்சை புள்ளிக்காக கல்வி என்பது ஒருவரின் தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பத்தை வழங்காது. அத்துடன் அனைத்து மாணவருக்கும் அது சம வாய்ப்பாகவும் அமையாது. பரீட்சையில் புள்ளி எடுக்க மாணவர் பாடம் பற்றிய விளக்கம் இன்றி மனனம் செய்து பரீட்சையில் சித்தி பெறுவது பலனற்றது. எனப்படுகிறது. "பல்வகைமை கொண்ட மாணவரிடையே பரீட்சையை மட்டும் வைத்து அவரது நிலை கணிக்கப்படுவதால் அது சம வாய்ப்பாக அமையாது" என ஹவர்ட் கார்ட்னர் கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
         மேலும் இலங்கை கல்வி முறையில் உள்ள ஒரு குறையாக மதம்சார் பாடசாலைகள் கருதப்படுகிறது. அதாவது பல்லின நாட்டில் தனியே மதம் சார்பான பாடசாலைகள் சமூகத்திலும், கல்வியிலும் வேறுபாட்டை பிரதிபலிப்பதாக அமைகின்றது. உதாரணமாக வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் இடத்தில் இப் பண்பு அங்கு இல்லை என்று கூறலாம். சிங்கபூர், பின்லாந்து போன்ற நாடுகளை போல் சமத்துவக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் எம் நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாடுகளின் அழிவுகள் போல இனியும் ஏற்படாது தடுக்க ஜாதி மத பேதமின்றிய கல்வியை அமுல்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
         மேலும் அரசியல் கல்வியை வழங்க வேண்டியது இலங்கை கல்வி முறையில் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாக கருதப்படுகிறது. அதாவது ஒரு சரியான அரசியல் தெளிவு மற்றும் பெண்கள்> பின்தங்கிய மக்கள் மற்றும் படிப்பறிவற்ற மக்களின் அரசியல் ஈடுபாடு போன்றன குறைவாக காணப்படுகின்றது. உதாரணமாக “ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன” என எண்ணுகின்றனர். அதனால் இடைநிலை கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதன் முக்கியத்துவம் பற்றிக் கற்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் நிலை மற்றும் அரசியல் அறிவு கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும்.
        எனவே மேற்கூறப்பட்டவாறு தொகுத்து நோக்கும் போது கல்வி என்பது ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. இளைய சமுதாயத்தின் தனியார் விருத்திக்கும் நாட்டு அபிவிருத்திக்கும் அந்நாட்டு கல்வி உதவ வேண்டும். அவ்வகையில் இலங்கை கல்வி முறைமையில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

M. Pathman

Monday, 22 May 2023

முரண்பாட்டு முகாமைத்துவம் - Conflict Management

முரண்பாட்டு முகாமைத்துவம், முரண்பாடுகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை தீர்க்கும் வழிகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Click this 👇👇


 

Tuesday, 16 May 2023

டொனமூர் யாப்பு

டொனமூர் யாப்பு (1931)

 இலங்கை வரலாற்றிலேயே 1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே விளங்குகின்றது. இலங்கையில் சட்ட நிரூபணசபை அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையில் இருந்த ஆள்பதி சேர். கியூ. கிளிபேட் என்பவர் புதியதொரு யாப்பு அவசியமான வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக 1927 ஆம் ஆண்டு இலங்கை வந்த டொனமூர் குழுவினர் 141 பிரமுகர்களை சந்தித்து உரையாடியும் 44ற்கு மேற்பட்ட மேடை கூட்டங்களை நடாத்தியும் சில தீர்மானங்களை முன்வைத்தனர். ஆள்பதி றொபேட் ஸ்ரான்லி காலத்தில் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்பின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

  1.  சர்வஜன வாக்குரிமை
  2.  ஏழு நிர்வாக குழுமுறை
  3.  அரசு கழகம்
  4.  பிரதேச வாரி பிரதிநிதித்துவமும் விரிவாக்கமும்
  5.  ஆள்பதி அதிகாரக் குறைப்பு
  6.  அரசாங்க செயலாளர் நியமனம் ( மூன்று காரிய தரிசிகள்)
  7.  மந்திரி சபை முறை
  8.  அரசாங்க சேவை ஆணைக்குழு அல்லது பொதுச் சேவை ஆணைக்கு  
 ஆகிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


 சர்வஜன வாக்குரிமை

 இலங்கை வரலாற்றில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை சகல துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக குறிப்பிடப்படுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அறிமுகப்படுத்திய வேளை இலங்கையில் இருந்து மத்தியதர வர்க்கத்தினரை சேர்ந்தவர்கள் எதிர்த்தனர். குறிப்பாக      A.Eகுணசிங்க உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரித்தனர். ஆனால் பெரும்பாலான மத்தியதர மக்கள் எதிர்த்தனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை   முன்வைத்துள்ளனர்.

  • படிப்பறிவற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகள் வீணடிக்கப்படும்.
  • ஏழைகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகளை விற்றல் ஆள்மாறாட்டம் செய்தல் வாக்குகளை வீணடித்தல் வாக்கின் பெறுமதியை உணராத நீதிக்கு புறம்பாக செயற்படல் என்பன இடம்பெறும்.
  • பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் எந்த பயனும் இல்லை அவர்கள் அரசியல் அறிவு அற்றவர்கள், சமூக அறிவு அற்றவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
  • சொத்தற்றவருக்கு நாட்டுப்பற்று கிடையாது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என கூறினார்.
  • சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதனால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் எனவும் வலியுறுத்தினார்.

 அவ் வேளையில் டொனமூர் பிரபு சர்வஜன வாக்குரிமை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றார். அது மாத்திரமல்லாது "நீந்த வேண்டுமானால் நீரில் இறங்க வேண்டும் அதேபோல் அரசியல் அறிவு வளர வேண்டுமானால் அரசியல் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்." அதற்காக சர்வஜன வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார்.


 இதனால் சர்வஜன வாக்குரிமை டொனமூர் சிபாரிசின்  பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். (ஆண் பெண் இருபாயாரும்) அரசு கழகத்திற்கான உறுப்பினரில் 50 பேர் தேர்தல் மூலம் அதாவது மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச வாரியாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



சர்வஜன வாக்குரிமையின் தாக்கம்

 சர்வஜன வாக்குரிமையானது இலங்கையில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது என அனுபவரீதியாக காணமுடிகிறது. இலங்கை வரலாற்றில் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போது பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின. ஆனாலும் அது அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கை வரலாற்றிலே பல்வேறு மாற்றங்கள் தோன்றின. இன்றைய நவீன இலங்கையின் மாற்றங்களுக்கு அவ்வாறான வாக்குரிமை மிக முக்கிய பங்காற்றியுள்ளது.


 சர்வஜன வாக்குரிமையின் அறிமுகத்தால் பெண்களின் அரசியல் அறிவு வளர்ச்சி அடைய தொடங்கியது. அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர். பெண் அரசியல் தலைவர்களும் உருவாகினர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பெண் பிரதமராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா பெண் ஜனாதிபதியாகவும் இலங்கையில் இருந்து ஆட்சி புரிந்திருப்பதை காணலாம். பெண்கள் அரசியலில் ஈடுபட்டதால் பெண்கள் நலன்சார் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெண்களுக்கு என தனியான வைத்தியசாலைகள், மகளிர் பாடசாலைகள் நிறுவப்பட்டன. பெண்களுக்கு என தனி அமைச்சும் ஒதுக்கப்பட்டது. பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுவதற்கு சர்வஜன வாக்குரிமை தூண்டுகோலாக மாறியது.


 சர்வஜன வாக்குரிமை செல்வாக்கு பெற்றதால் கட்சி முறை தோன்றியதனால் கட்சியில் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்க வேண்டி இருந்ததால் சாதி வேறுபாடு இன்றி கட்சி முறைகள் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தோன்றி வளர்ச்சி அடைந்திருந்தன. இன்று 60க்கும் மேற்பட்ட கட்சிகள் செயற்படுகின்றன.


 சர்வஜன வாக்குரிமை சிறுபான்மையினருக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தியது. ஏனெனில் சிறுபான்மையினர் உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை காணலாம். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூக முன்னேற்றங்களும் விவசாய அபிவிருத்தி போன்றன தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவதால் பல திட்டங்கள் உருவாக வழி வகுத்தது. டி எஸ் சேனநாயக்கா மின்னேரியாத் திட்டத்தையும், உடவளவை திட்டத்தையும், கல்லோயா திட்டத்தினையும் கொண்டு வந்தார்.  C. W. W கன்னங்கரா இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். சில தீய விளைவுகளுக்கும் வழிவகுத்தது குறிப்பாக S. W. R. D பண்டாரநாயக்கா தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார். இதனை ஒரு பாதிப்பான நிகழ்வு என கருதலாம்.   


 D.Sசேனநாயக்கா சேனநாயக்க சமுத்திரத்தை உருவாக்கி இருந்தார். இது ஒரு சிறப்பான திட்டமாகும். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களும் மேல் நிலைக்கு வர உதவியது. சௌமிய மூர்த்தி தொண்டமான் R.பிறேமதாச முதலான அரசியல் தலைவர்கள் சர்வஜன வாக்குரிமையினாலேயே மேல்நிலை அடைய முடிந்தது. அதேவேளை லஞ்சம், ஊழல் முதலானவை அதிகரிக்க நேர்ந்ததோடு வாக்குகளை விற்றல், ஆலள்மாறாட்டம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதே வேளை ஜனநாயகம், மனித உரிமை முதலான கோட்பாடுகள் வளர்ச்சி அடையவும் வழி வகுத்தது. பின்னணியில் சுதந்திரம் பற்றிய எண்ணம் வளர்ச்சி அடையவும், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் வளர்ச்சி அடையவும் உதவியது. அதுமாத்திரம் அல்லாது  சிறுபான்மையினருக்கு பாதிப்பான நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர் உள்ள இடங்களில் தேர்தலில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் காணப்பட்டது.


 எனவே கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வஜன வாக்குரிமையானது இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தத்தோடு ஜனநாயக கோட்பாடுகள் வளர்ச்சி அடைய வழிவகுத்திருந்ததனையும் காணலாம்.



அரசுக் கழகம்

 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது அரசு கழகமாகும் இது மொத்தமாக 61 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இதில் 50 பேர் பிரதேச அடிப்படையில் அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் மூலம் 50தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் சார்பாக ஆள்பதி எட்டு பேரை நியமனம் செய்வார். அவர்களுடன் பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், நீதி செயலாளர், ஆகியோரை உள்ளடக்கி மொத்தம் 61பேரை உள்ளடக்கியதாக காணப்படும். 


   அரசு கழகம் ஆனது சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரம் மிக்க மன்றாக செயற்படும். அரச துறையில் இலங்கைக்கு அனுபவம் கிடைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக விளங்கியது. எந்த ஒரு மசோதாவும் இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னரே சட்டமாக முடியும் ஆகவே சட்ட உருவாக்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மன்றாக இது விளங்கியது. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவர்கள் செய்யப்பட்டனர்.


 ஏழு நிர்வாகக் குழு

 டொனமூர் யாப்பில் ஏழு நிர்வாகக் குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுக் கழகத்தில் பிரதேச அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 50 பேரும் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேரும் உள்ளடங்கிய 58 பேரும் 7 நிர்வாக குழுவாக வகுக்கப்படுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் 6 தொடக்கம் 9 வரை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் அரசாங்க சேவை ஒழுங்காக இடம்பெறும் என டொனமூர் சிபாரிசு செய்தார்.

  1.  சுகாதாரம்
  2.  கல்வி
  3.  விவசாயம், காணி
  4. வர்த்தகம், கைத்தொழில்
  5. உள்ளூராட்சி
  6. உள்நாட்டலுவல்கள்
  7. போக்குவரத்தும் பொது கட்டிட வேலையும்
 என்ற ஏழு நிர்வாகக் குழுக்களுமே இங்கு செயற்ப்பட்டன. ஒவ்வொரு நிர்வாகக் குழுவும் தமது நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான மசோதாக்களை உருவாக்குவதோடு வரவு செலவு திட்டங்களை தயாரிப்பதும் அவர்களது முக்கியமான கடமைகள் ஆகும்.


 மந்திரி சபை முறை 


 டொனமூர் ஜாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஓர் விடயமாக விளங்குவது அமைச்சரவை முறையாகும். ( மந்திரி சபை முறைமை) நிர்வாக குழுவிலும் உள்ள ஒவ்வொரு தலைவர்கள் ஏழு பேரும் பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, நீதி காரியதரிசி எனப்படும் மூவரையும் உள்ளடக்கிய 10 பேரும் அமைச்சரவையில் உள்ளடங்குவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் மந்திரிசபைக்கு கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டு இறுதியில் அமைச்சரவையில் நிறைவேறும் தீர்மானங்கள், மசோதாக்கள் அரசக்கழகத்தில் சமர்ப்பிக்கப்படும். பிற்காலத்தில் அமைச்சரவை முறை தோன்றி வளர்ச்சி அடைவதற்கு இது வாய்ப்பாக அமைந்தது.


பிரதேச வாரி பிரதிநிதித்துவம்


 கோல்புறூக் கமரன் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது இனவாரிப் பிரதிநிதித்துவ முறை மக்களை இனரீதியாக சிந்திக்க வைப்பதால் இனப் பாகுப்பாடு அதிகரிப்பதாக குறிப்பிட்ட டொனமூர் 1883 கொட்டாஞ்சேனைக் கலகம், 1915 ஆம் ஆண்டு கம்பளை கலகம் போன்றன இனமுரண்பாட்டை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டினார்.

  ஆகவே பிரதேச பாரி அடிப்படையில் சர்வஜன வாக்குரிமை மூலம் தெரிவு செய்கின்ற முறை சிறப்பானது என சுட்டிக்காட்டிய டொனமூர் இலங்கை முழுவதையும் 50 தேர்தல் தொகுதிகளாக வகுத்து ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்யப்படும் முறையை அறிமுகம் செய்தார். இதன்படி 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி அல்லது ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்திற்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன ரீதியான ஒற்றுமையை வலியுறுத்தி பிரதேசவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட போதும் இனரீதியாக சிந்திக்க தலைப்பட்ட மக்கள் இனரீதியான சிந்தனையை அதிக அளவில் வளர்த்துக் கொண்டதால் தேர்தலின் போது இன வேறுபாட்டை அதிகம் காட்டினர். இதனால் பின்னால் விகிதாசார பிரதிநிதித்துவம் தோற்றம் பெற்றதாக தெரிய வருகிறது. பிரதேசவாரி பிரதிநிதித்துவம் வெற்றி அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.


மூன்று காரியதரிசிகள் (செயலாளர் )


 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மூன்று காரியதரிசிகள் நியமன முறையாகும். பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, நீதி காரியதரிசி ஆகிய மூவரும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதோடு நிர்வாக ரீதியான செயற்பாடுகளையும் ஒழுங்கமைப்பர். இதன் மூலம் ஆள்பதியின் அதிகாரங்கள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 பிரதம காரியதரிசி என்பவர் ஏனைய காரியங்களுக்கு பொறுப்பாகவும் அமைச்சரவையின் தலைவராகவும் தேவை ஏற்படின் அரசுக் கழகத்தின் தலைவராகவும் செயற்படுவார். இவர் ஆள்பதியின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூறுபவராகவும் காணப்படுவர். வெளிநாட்டு ராஜதந்திரம், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இவர் அதிகாரம் உடையவராக காணப்படுவர். ஆள்பதி இல்லாத தருணத்தில் ஆள்பதிக்கு பதில் கடமையாற்றுவர்.


 நிதிக்காரிய தரிசி அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம், சுங்கத் திணைக்களம்,  துறைமுகம் போன்றவற்றிற்கு பொறுப்பாக செயற்படுவர். அது மாத்திரம் அல்லாது நாட்டின் வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது, வருமானத்தை ஈட்டக் கூடிய வழிகள் பற்றியும் ஆள்பதிக்கு பரிந்துரைப்பார்.


 நீதி காரியதரிசி எனப்படுபவர் நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குவதோடு நீதித்துறையை ஒழுங்கமைத்தல், நீதிமன்றங்களை நிர்வகித்தல், யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் உயர்நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரித்தல், நீதிபதிகளை நியமித்தல் முதலான கடமைகளை ஆற்றுவர். இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட நீதித்துறை ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


 ஆள்பதியின் அதிகாரக் குறைப்பு 


 கிபி 1802 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய முடிக்குக்குரிய நாடாக மாற்றப்பட்டது முதல் ஆள்பதியின் அதிகாரம் அதிகமாகவே காணப்பட்டது. சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய முத்துறைகளிலும் ஆள்பதி வரையறுக்க முடியாத அளவிற்கு அதிகாரம் உடையவராக காணப்பட்டார். ஆள்பதி அதிக அதிகாரங்களை கொண்டிருப்பதால் அவர் சர்வாதிகாரி போன்று செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக டொனமூர் ஆள்பதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் சில முன்மொழிவுகளை முன் வைத்தார். அரசு கழகம் சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரங்களை கொண்டிருப்பதால் சட்ட உருவாக்கத்தில் ஆள்பதியின் பங்கு குறைக்கப்பட்டது. அதேவேளை ஏழு நிர்வாக குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் ஆள்பதியின் நிர்வாகம் தொடர்பான அதிகரங்கள் குறைக்கப்பட்டது. மூன்று காரியதரிசிகள் சட்டம், நீதி, நிதி ஒன்று விடயங்களை கண்காணிப்பதாலும் அமைச்சரவை தீர்மானங்களை முன் வைப்பதாலும் ஆள்பதியின் அதிகாரம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் உருவாக்கியது.


 மேற்கூறப்பட்ட வகையில் ஆள்பதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வாய்ப்புகள் ஏற்படுத்திய போதிலும் உண்மையில் அவரது அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை எனவே குறிப்பிடப்படுகிறது.


 அவசர கால நிலைமையின் போது நாட்டை முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல், எந்த ஒரு மசோதாவையும் சட்டமாக்க வேண்டுமாக இருந்தால் ஆள்பதியின் கையொப்பம் பெறுதல் அவசியம். அரசுக்கழகத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினர் பெற்ற மசோதாவை ஆறு மாதங்கள் வரை தள்ளிப்போடும் அதிகாரம் வழங்கப்பட்டது. முப்படைகளின் தலைவராகவும், வெளிநாட்டு ராஜதந்திரிகளை நியமிப்பவராகவும், அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவும் காணப்படுவார். பிரித்தானிய அரசின் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக செயற்படுவார். இதனால் ஆள்பதியின் அதிகாரம் குறைக்கப்படவில்லை என்றே சுட்டிக் காட்டப்படுகிறது.


பொதுச் சேவை ஆணைக்குழு


 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயமாக குறிப்பிடப்படுவது பொது சேவை ஆணைக்குழு ஆகும். பொதுசேவை ஆணைக்குழு என்பது "மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களின் நலன்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு" ஆகும். அரசாங்க உத்தியோகத்தர்களின் இட மாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு முதலான விடயங்களில் ஏற்படுகின்ற அநீதிகளை தடுத்து நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பொதுச்சேவை ஆணைக்குழு ஆகும்.

 எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது இலங்கை வரலாற்றில் அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கும் ஜனநாயகம் தளைதோங்குவதற்கும் டொனமூர் யாப்பு  வழி வகுத்திருந்ததனைக் காணலாம்.

Friday, 5 May 2023

இங்கிலாந்தில் தேசிய அரசு

 இங்கிலாந்தில் தேசிய அரசு


                   இங்கிலாந்து தேசிய அரசாக எழுச்சி பெற்ற நாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அங்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் மற்றும் மக்கள் முதலானோரின் தேசிய உணர்வு, அரசியல் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் தேசிய அரசை உருவாக்கியிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து சிறந்ததொரு நிலையை அடைந்திருந்ததென தெரிய வருகிறது. இங்கிலாந்து ஒரு தனிப் பிரதேசமாக காணப்பட்டது. குறிப்பாக சுற்றிவர கடல் காணப்பட்டமை, வெளிநாட்டு தொடர்புகள் அற்ற ஒரு தீவு போன்று காணப்பட்டமை, மிகச்சிறந்ததொரு தனித்துவம் உடைய நாடாக அதனை மாற்றியது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் ஆரம்பத்தில் அது பல துண்டுகளாக பிரிந்து காணப்பட்டது. ரோமானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றியதை அடுத்து அங்கே மக்கள் ரோமானியர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். இதுவே அது தேசிய அரசாக உருவாக மிக முக்கியமான காரணமாகும். அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்களுடைய செயற்பாடுகளும் அதனை தேசிய அரசாக மாற்றியது.


       நொமண்டில் பிரதேச ஆட்சியாளனாக விளங்கிய முதலாம் வில்லியம் முதலாவதாக நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். பிளவுற்று இருந்த பிரதேசங்களை ஒன்றிணைத்தான். மானிய பிரபுக்கள் அங்கு செல்வாக்கு பெற்றிருந்ததால் அவர்களின் செல்வாக்கை குறைக்கும் நோக்குடன் சவிஷ்புரி என்ற உடன்படிக்கை ஒன்றை செய்து சிற்றரசர்களையும் பிரபுக்களையும் மன்னனுக்கு வரி செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தான். இதனால் மன்னனின் வலிமை அதிகரிக்க மானிய பிரபுத்துவ முறை செல்வாக்கிழந்து போனது. இவன் லண்டியம் என்று அழைக்கப்பட்ட லண்டனை தலைநகரமாகக் கொண்ட அரசை உருவாக்கியமை மிகச்சிறந்த அம்சமாகும்.


                           கிபி 1154 ஆம் ஆண்டளவிலே ஆட்சிப்பீடம் ஏறிய இரண்டாம் ஹென்றி நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பு ஒன்றை உருவாக்கினான். இதன் மூலம் நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதிமுறைகளையும் உருவாக்கினான். பொலீஸ் சேவை, நீதிச்சேவை என்பவற்றை ஏற்படுத்தியதோடு நீதிபதிகளையும் யூரிமாக்களையும் நியமித்து அதன் மூலமாக நீதித்துறையை ஒழுங்கு படுத்தினான். ஒவ்வொரு பிரதேசங்களிலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காவலர்களையும் நீதித்துறையின்ரையும் நியமித்தான். 


                          இங்கிலாந்து தேசிய அரசாக உருவாகுவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவன் ஏழாம் ஹென்றி ஆவான். இவன் லங்காஸ்ரர் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்த போதும் ஜோகிற்ஸ் வம்சத்துடன் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்த ரோசாப்பூ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். ஜோகிற்ஸ்  வம்சத்தினருக்கும் லங்காஸ்ரர் வம்சத்தினருக்கும் இடையே ஜோகிற்ஸ் வம்சத்தினர் வெள்ளை ரோஜாவையும்  லங்காஸ்ரர் வம்சத்தினர் சிவப்பு ரோஜாவையும் சின்னமாகக் கொண்டு இங்கிலாந்திலே யார் ஆட்சியை கைப்பற்றுவதெனும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ் வேளை லங்காஸ்ரர் வம்சத்தில் வந்த ஏழாம் என்று ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த ரிச்செட் என்பவனை தோற்கடித்து ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த எட்வேட் என்பவனது மகளை திருமணம் செய்து மீண்டும் இது வம்சங்கள் இடையே முரண்பாடு வராமல் தடுத்தான். அதேவேளை புதிய வம்சமான தியூடர் வம்சத்தை ஆரம்பித்து வைத்ததன் மூலம் புதிய வம்சம் ஒன்றை தொடங்கிய மன்னனாக காணப்படுகின்றான் இவன் திகழ்ந்தான்.


                ஏழாம் ஹென்றி ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்தான். அந்த வகையிலே நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பை உருவாக்கியதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீதித்துறையை உருவாக்கினான். அந்த வகையிலே நட்சத்திர நீதிமன்றம் (Star Chamber) என்ற பெயரிலே நீதிமன்றம் ஒன்றை நிறுவி சிறந்த நீதித்துறை அமைப்பை உருவாக்கினான். அதுமட்டுமல்லாது நீதியை நல்ல முறையிலே வழங்குவதற்காக சிறந்த நீதிபதிகளையும் யூரிமார்களையும் நியமித்தான். மக்களுக்கு அரசன் மீதும் ஆட்சி மீதும் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தேசிய உணர்வுடன் பிரித்தானியா எழுச்சி பெறுவதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.


                       அந்த வகையில் ஆடை உற்பத்தி, பீங்கான் உற்பத்தி, அழகுசாதன பொருட்களின் உற்பத்தி, நிலக்கரி, இரும்பு உற்பத்தி முதலானவற்றிலும் ஆர்வம் செலுத்தினார். இதனால் கைத்தொழில் வளர்ச்சி அடைந்தது. நாடுகான் பயணத்தை மிக முக்கியமான நடவடிக்கையாக மேற்கொண்டதோடு நாடுகான் பயணத்திற்கு பிரான்சிஸ் டிரக்ட், ஜோன்கபெட் போன்றோர்களை ஈடுபடுத்தினார். அத்துடன் பெரும்பாலான துறைமுகங்களை விருத்தியடையச் செய்தான். லிபர்பூல், போபர், மன்செஸ்ரர் முதலிய துறைமுகங்களை விருத்தியடைய செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வாணிபத்தை ஊக்கப்படுத்தினான். நாடுகான் பயணத்தின் மூலம் பல நாடுகளை கண்டறிந்து குடியிருப்புகளை ஏற்படுத்த செய்தான். இவருடைய காலத்தில் அமெரிக்காவில் பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன அந்த வகையில் இங்கு பாரியளவு பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்பட்ட காலமாகவும் இவரது காலம் காணப்பட்டது. கிபி 1485 ஆம் ஆண்டு இவன் ஆட்சிக்கு வந்த காலம் திருச்சபையினதும் பிரபுக்களினதும் அதிகாரத்தை கட்டுப்படுத்தியதோடு மத்தியதர வர்க்கத்தின் எழுச்சிக்கு வழிகாட்டினான். இதனால் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவன் நாட்டில் தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்படுத்தினான்.


 வெளிநாடுகளில் பல குடியிருப்புகளை அமைப்பதிலும் இவன் மிகுந்த முக்கியத்துவத்துடன் செயற்பட்டான். ஜோன்கபெற் நியூபௌன்லாந்தை அடைந்ததை தொடர்ந்து அங்கு குடியேற்றங்களை அமைத்ததோடு அமெரிக்காவில் பல குடியேற்றங்கள் உருவாக காரணமாக இருந்ததோடு பெருந்தொகை செல்வங்களைக் கொண்டு வந்து பிரித்தானியாவை அபிவிருத்தி அடைய செய்தான். அரசியல் ரீதியாக ஸ்கொட்லாந்து, ஸ்பானியா முதலான நாடுகளுடன் திருமண தொடர்புகளை ஏற்படுத்தினான். தனது புதல்வர்களை வெளிநாட்டு இளவரசர்களுக்கும் இளவரசிகளுக்கும் திருமணம் புரிந்து கொடுத்து வெளிநாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி இங்கிலாந்தின் முடியாட்சியை பலப்படுத்தினான்.


              ஏழாம் ஹென்றியின் பின் ஆட்சி பீடம் ஏறிய எட்டாம் ஹென்றி மிகவும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினான். ஆரம்பத்தில் போப்பாண்டவருடன் நல்ல உறவை ஏற்படுத்தி இருந்த இவன் தனது இரண்டாவது திருமணத்திற்காக போப்பாண்டவரிடம் அனுமதி கூறியபோது அவர் எதிர்த்ததை தொடர்ந்து போப்பாண்டவருடன் முரண்பட்டு கொண்டான். ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் பாதுகாவலன் என்றெல்லாம் போப்பாண்டவர் பத்தாம் லியோவால் புகழப்பட்ட எட்டாம் ஹென்றி பின்னாளில் ஏற்பட்ட முரண்பாட்டால் எட்டாம் ஹென்றிக்கும் பத்தாம் லியோவிற்கு இடையில் உறவு நிலை முடிவடைந்தது. இந்நிலையில் எட்டாம் ஹென்றி உரோமன் கத்தோலிக்கம் தனது நாட்டிலே எந்த விடயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவிட்டான்.


                 உயாராண்மை சட்டம் என்ற சட்டத்தின் மூலம் இங்கிலாந்திலே கத்தோலிக்கத்தில் நடவடிக்கைகள் அனைத்திற்கும் தானே பொறுப்பென கட்டளையிட்டத்துடன் கத்தோலிக்க சமயம் சார் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கே சமய ரீதியான அரசியல் தலையீடுகள் இல்லாத ஒழிக்கப்பட்டது. இதனால் பாரிய அளவிலே இங்கிலாந்தின் எழுச்சி உன்னதமான நிலையை அடைந்தது. இவனது காலத்திலே ஆங்கில திருச்சபை (அங்கிலிக்கன் திருச்சபை) நிறுவப்பட்டதோடு அதன் தலைவராக தானே செயல்பட்டார். பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்ட இவன் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் மக்களின் நல்லபிப்பிராயத்தையும் பெற்றான். இதனால் இங்கிலாந்து தேசிய அரசு என்று ரீதியில் மிகச்சிறந்த எழுச்சியை பெற்றுக் கொண்டது.


                           இவன் பின் ஆட்சி பீடம் ஏறிய ஆறாம் எட்வர்ட், மேரி ஆகியோரின் ஆட்சி சொற்ப காலமே இடம்பெற்றதால் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவியான ஆன்பொலினின் மகளாகப் பிறந்த எலிசபெத் சிறப்பு உடையவளாக திகழ்ந்தார். இவள் ஸ்பானியாவின் ஆர்மடா கப்பல் படையை தோற்கடித்ததோடு மேலும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினாள். இவளது காலத்திலே மிகவும் பரந்த சாம்ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனி கி.பி 1602ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல நாடுகள் கைப்பற்றப்பட்டன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. எலிசபெத் மகாராணியின் ஆட்சியின் போது ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பிரித்தானியாவின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது மாத்திரம் அல்லாது உலகின் அனைத்து கண்டங்களிலும் இங்கிலாந்தின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது.

  

                          எலிசபெத் ஆட்சியின் பின் ஸ்ரூவர்ட் வம்சம் ஆட்சிக்கு வந்தது. அதாவது எலிசபெத் திருமணம் புரியாத காரணத்தினால் எலிசபெத்தின் பின் ஆட்சிக்கு வர எவரும் இல்லாத காரணத்தினால் ஸ்ரூவர்ட் என்னும் புதிய வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. ஸ்ரூவர்ட் வம்ச காலத்திலே பாராளுமன்றத்திற்கு மன்னனுக்கும் இடையே சமய ரீதியான முரண்பாடுகள் தோன்றின. இதனால் பாரிய அளவிலே புரட்சி ஒன்று கிபி 1688ஆம் ஆண்டு தோன்றியது. இது ஆங்கிலப் புரட்சி எனப்பட்டது. கிபி 1689ஆம் ஆண்டு இங்கு உரிமைகள் தொடர்பான மசோதா ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தினதும் மன்னனதும் அதிகாரம் வரையறுக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து ஒரு பலம் வாய்ந்த தேசிய அரசாக மாறியது.


              எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக மாறியது.

Tuesday, 2 May 2023

தேசிய அரசின் பண்புகள்


 தேசிய அரசின் பண்புகள்

 தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாசார அடிப்படையில் முழுநிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும்." அந்த வகையில் தேசிய அரசு என்பது தனக்கென சில பண்புகளை கொண்டிருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் தேசிய அரசானது பல பண்புகளை உள்ளடக்கியதாக காணப்படுவதே சிறப்பாகும்.


 தேசிய அரசு என்பது மிக முக்கியமாக மொழி ரீதியான ஒற்றுமையை கொண்டிருப்பது அவசியமாகும். ஒரே மொழியில் இருப்பதன் மூலம் தேசிய ஒற்றுமை பலப்படுத்தப்படும் அதேவேளை இனரீதியான ஒற்றுமை காணப்படுவதும் இங்கே சிறப்பம்சமாக காணப்பட்டது. மற்றும் தேசிய அரசின் பண்பில் அங்கு மத ரீதியான பிரச்சினைகள் எழாமல் மத ஒற்றுமை காணப்படுவது அல்லது ஒரே வகையான மதம் இருப்பதும் மிக முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது.


 அந்த வகையில் தேசிய அரசானது பல்வேறு பண்புகளையும் இயல்புகளையும் கொண்டது என தெரிய வருகிறது. ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் சிறந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.


 அதேபோன்று தேசிய அரசானது நிரந்தரமானதும் வரையறுக்கப்பட்டதுமான எல்லைகளை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. புவிசார் எல்லைகளை கொண்டிருப்பதே நாடு என அரசியலில் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய எல்லைகளை உடையதாகவும் இனம், மொழி, மத அடிப்படையில் ஒற்றுமை தன்மையுடையதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசியல், கலாசார அடிப்படையில் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அங்கே அரசனே முழு நிறைவான அதிகாரமுடையவனாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அங்கே நிரந்தர ராணுவப் படைகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படை, தரைப்படை முதலானவற்றை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உறுதி வாய்ந்த இராணுவத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

  

  மேலும் அரச ஊதியம் பெறும் உத்தியோகத்தர்களை கொண்டிருப்பதோடு நிரந்தர அரசாங்க சேவையாளர் இங்கே கடமையாற்றுவது முக்கியமானதாகும். அதாவது அரச சேவைப்படை அல்லது ஆளணி ஒன்றை கொண்டிருப்பதோடு அரசன் பிரபுக்களையோ, சிற்றரசர்களையோ, ஏனைய தரப்பினரையோ நம்பி இல்லாது தன்னிடமிருந்து சம்பளம் பெறுகின்ற விசுவாசம் மிக்க கூட்டத்தை தனது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டு செயற்படல் வேண்டும்.


  தேசிய அரசு நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு சட்ட தொகுப்பை கொண்டிருப்பதோடு தனக்கென யாப்பொன்றை கொண்டிருப்பது அவசியமாகும். இல்லையெனில் நாட்டிற்கென தனியான சட்ட தொகுப்பை உடையதாக இருக்க வேண்டும். அரசன் நாடுகான் பயணத்திற்கு ஊக்கம் அளித்ததோடு பிறநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக காணப்பட வேண்டும். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் செல்வங்களை பெற்று அந்த செல்வங்களைக் கொண்டு தனது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதோடு பிற நாடுகளில் இருந்து செல்வங்களை பெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும்.


   பொருளாதாரத்தை பொறுத்தவரையில் தன்னிறைவு பொருளாதாரம் ஏற்பட்டதோடு விவசாயம், வர்த்தகம் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் முன்னேற்றமான ஒரு நிலை காணப்படும். இதனால் ஒரு வளர்ச்சி அடைந்த பொருளாதார நிர்வாகத்தை காணலாம். நிர்வாக ரீதியாக அரசன், அவனுக்கு கீழ்ப்பட்ட அமைச்சரவை, நிர்வாக அலகுகள் காணப்பட்டன. புத்தாக்க கண்டுபிடிப்பு தனிப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் முதலானவற்றை அங்கு முக்கியத்துவப்படுத்தினர். இதனால் ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியலையும் உறுதிப்படுத்தும் நிலை காணப்பட்டது. பிரபுக்களின் அதிகாரங்கள் குறைவடைந்ததுடன் சிற்றரசர்களின் செல்வாக்கு இல்லாதொழிக்கப்பட்டு புதிய அரசியல் சிந்தனைகளும் காணப்படும். அதாவது நவீன அரசியல் சிந்தனைகளை உள்வாங்கி அங்கே அரசனும் மக்களும் செயற்படுவதோடு அரசனுக்கு பலம் வாய்ந்த நவீன சிந்தனைகளை கொண்ட ஒரு அமைச்சர்களை கொண்ட கூட்டம் மற்றும் ஆளணியினர் காணப்படுவர்.


 பிரதேச ஆட்சியாளர்கள் செல்வாக்கிலந்தவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக பிரபுக்கள், சிற்றரசர்கள் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை. அரசனே முழு அதிகாரம் உடையவனாக காணப்பட்டார். மதகுருமார்கள் அங்கே செல்வாக்கு மிக்கவர்களாக இருக்க முடியாது. மதகுருமாரின் தலையீடுகள் தடுக்கப்பட்டது. இங்கே "அரசியல் வேறு சமயம் வேறு" என்கிற அடிப்படையில் காணப்பட்ட போதிலும் அரசனே நாட்டினுடைய கலை, கலாசார, பொருளாதார, அரசியல், சமூக விடயங்களுக்கு பொறுப்பானவனாக காணப்படுவான். இளவரசன் என்னும் நூலில் கூறப்படுவது போல் முழு அதிகாரமும் செல்வாக்கும் அரசரிடம் காணப்பட்டது. எந்த ஒரு வெளிச்சக்தியினது செல்வாக்கும் அந்நாட்டின் எல்லைக்குள் இடம்பெற முடியாது. படையெடுத்தல், சமாதானம் செய்தல், வெளிநாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புதல் போன்ற சகல நடவடிக்கைகளும் அரசனாலேயே முன்னெடுக்கப்பட்டன.


      தேசிய அரசானது நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதியை வழங்கக்கூடிய நீதிமன்றத்தை கொண்டிருக்க வேண்டும். அதுமாத்திரம் அல்லாது ஆட்சியாளர் நீதி விடயங்களில் தலையிடக்கூடாது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அத்தோடு ஆட்சியாளன் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை முன்னெடுப்பான். யாவருக்கும் பொதுவான, நாட்டிற்கு பொதுவான தேசிய வரிக் கொள்கை ஒன்று காணப்படும். பொருளாதார ரீதியாக நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளை அரசன் முன்வைக்க வேண்டும். அதேநேரம் ஒன்றுபட்ட முடியாட்சி காணப்பட வேண்டும். அங்கே அரசனே முடியாட்சிக்கு பொறுப்பானவனாகவும் அவனது நிர்வாக நடவடிக்கைகளுக்கு கீழ்ப்பட்டதாக அனைத்தும் காணப்பட வேண்டும். அங்கே யாரும் தனிப்பட்ட ஆட்சியை மேற்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட ரீதியாக அரசனை கட்டுப்படுத்தவோ அல்லது அரசனது செயற்பாடுகளுக்கு முரணாகவோ செயல்படாத வகையிலே வலுப்படுத்தப்பட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகம் இருப்பதே தேசிய அரசாகும்.


    எனவே மேற்ககூறப்பட்ட வகையில் தேசிய அரசானது பல பண்புகளை கொண்டிருந்ததனை காணமுடிகிறது.



தேசிய அரசுகளின் தோற்றம்

தேசிய அரசுகளின் தோற்றம்

 தேசிய அரசு என்றால் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும். அதாவது ஒரு நாட்டிலே ஆட்சியாளன் முழு விடயங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதோடு முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தன்மையே தேசிய அரசு ஆகும். தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். " அந்த வகையில் தேசிய அரசு கிபி 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் தோன்றிய புதிய வகையான அரசியல் முறை என்பதால் இதனை புதிய முடியாட்சி அல்லது புதிய வகை ஆட்சி முறை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பாவிலேயே முதலிலே தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய குறிப்பிடப்படுகின்ற போதிலும் அண்மைக்கால ஆய்வுகளின் படி இங்கிலாந்தே முதல் தேசிய அரசு எனக் குறிப்பிடுபவரும் உள்ளனர். அதன்பின்னர் பிரான்ஸ், போர்த்துகல், ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசுகளாக மாறின.

    

   தேசிய அரசின் தோற்றத்திற்கான காரணங்கள்.

              தேசிய அரசு என்பது புதிய முடியாட்சி ஆகும். அந்த வகையிலே கிபி 15 ஆம் நூற்றாண்டின் பின் எழுச்சி பெற்று வந்த வலிமையான ஆட்சி முறையே தேசிய அரசாகும். அதாவது வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படையில் முழு நிறைவான அதிகாரம் கொண்ட அரசே தேசிய அரசாகும். அவ்வாறு தோன்றிய தேசிய அரசாக ஸ்பானிய தோன்றி பின் பிரான்ஸ் போர்த்துகல் ஒல்லாந்து போன்ற நாடுகளும் தேசிய அரசாக மாறின என கூறப்படுகிறது. தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக விளங்கியது என சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையிலே தேசிய அரசானது பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்களால் எழுச்சி பெற்றதெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.


                    மானிய முறையின் வீழ்ச்சியின் பின் தோன்றிய மறுமலர்ச்சியானது அரசியல் ரீதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவ்வாறு ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்றாக தேசிய அரசின் தோற்றமும் குறிப்பிட முடியும். மறுமலர்ச்சி காலத்திலே புதிய அரசியல் சிந்தனைகள் தோன்றியது. அவ்வாறு தோன்றிய புதிய சிந்தனையானது அரசியல் உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியது. பிறப்புக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு அரசர்கள் வலிமை மிகுந்தவர்களாக மாறினார். இதனால் தேசிய அரசுகள் தோன்றின. குறிப்பாக ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மிகவும் பலம் வாய்ந்த தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.


                       பிரபுக்கள் சிற்றரசர்கள் தமது செல்வாக்கை குறைக்கும் நிலை உருவானது. அதாவது பிரபுக்களும் சிற்றரசர்களும் அரசர்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். வலிமை வாய்ந்த அரசர்கள் எழுச்சி பெற்றனர். இதன் காரணமாக இறைமை கொண்ட அரசு எழுச்சி பெற்றது. நாடுகான் பயணங்களின் தோற்றத்தினால் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வலிமை பெறத் தொடங்கினர். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்ட நாடுகளில் அரசர்கள் வலிமை பெற்றனர். குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பானியா, பிரான்ஸ் முதலிய நாடுகள் நாடுகான் பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அதிக செல்வங்களை பெற்றுக் கொண்டன. இதனால் நிரந்தர படை மற்றும் உள்நாட்டு கட்டுமானங்கள் மற்றும் நிலையான அரசியல் நிலை வளர்ச்சி அடைந்தன. இதன் காரணமாக தேசிய அரசுகளாக இந்நாடுகள் உதயமாகின.


                 இங்கிலாந்து பிரான்ஸ் ஸ்பானிய முதலான நாடுகளில் வலிமை பெற்ற ஆட்சியாளர்கள் எழுச்சி பெற்றமை தேசிய அரசின் தோற்றத்திற்கு காரணமாக விளங்கியது. அதாவது இங்கிலாந்திலே ஏழாம் ஹென்றி, எட்டாம் ஹென்றி, எலிசபெத் மகாராணி, போன்றோர் பிரான்சிலே மூன்றாம் சாள்ஸ், நான்காம் ஹென்றி, பதினொராம் லூயி, 14ஆம் லூயி போன்றோரும் பானியாவிலே தேடினேன் அவனது மனைவி இசபெல்லா, ஐந்தாம் சாள்ஸ் போன்றோரும் இந்நாடுகளின் எழுச்சிக்கு பெரிதும் உதவினர். இதேவேளை அந்த அரசர்களுக்கு கிடைத்த நல்ல அமைச்சர்களும் அவற்றின் வெற்றிக்கு உதவினர். நான்காம் ஹென்றியின் அமைச்சர் சல்லி கோமானார், எட்டாம் ஹென்றியின் அமைச்சரான கர்தினால் ஊல்கி, 14ஆம் லூயியின் அமைச்சரான கொல்பேட், லூவோ போன்ற அமைச்சர்களும் அரசர்களுக்கு வாய் தமையும் அரசர்கள் சிறந்த அறிவாற்றலும் வலிமையும் கொண்டு பெற்றமை தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தன.


      சமய சீர்திருத்தத்தின் தோற்றத்தினால் சமயம் வேறு அரசியல் வேறு என்கிற நிலை தோன்றியது. இதனால் சமய ரீதியான அடக்கு முறையும் ஆதிக்கமும் குறைவடைந்தது. மதகுருமார் போப்பாண்டவர் போன்றோரின் அதிகாரமும் செல்வாக்கும் குறைவடைந்தது. அது மாத்திரமில்லாது பரிசுத்த உரோமப் பேரரசு முறைமை செல்வாக்கிழந்து போனமை இதனால் அரசர்கள் வலிமை பெற்று தேசிய அரசுகள் தோற்றம் பெற்றன.


     விஞ்ஞான வளர்ச்சி தோன்றியமையால் அரசியல் வளர தொடங்கியது. குறிப்பாக உலகம் உருண்டை என்ற கோட்பாடு செல்வாக்கு பெற்று தேசிய உணர்வு வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில் அறிவியல் வளர்ச்சியால் பல பல்கலைக்கழகங்கள் தோன்றியது. மக்கள் கல்வியறிவு உள்ளவர்களாக மாறினர் அரசியல் அறிவும் வளர்ச்சி அடைந்தது. இதனால் தேசிய அரசுகள் தோன்றின. 'இளவரசன்' (The Prince) என்ற நூலை எழுதிய மாக்கியவல்லி அரசனின் தந்திரம் மக்களின் வாழ்க்கை முறை முதலானவற்றை கூறினார். இதனால் தேசிய அரசு பற்றிய எண்ணக் கோட்பாடுகள் வளர்ச்சி அடைந்தன. ஜீன் போடின் முன்வைத்த கோட்பாடும் மக்களை சிந்திக்க செய்தது. இவ்வாறு மாக்கியவல்லி, ஜீன்போடின் போன்றோரின் சிந்தனைகளும் தேசிய அரசின் எழுச்சிக்கு வழிவகுத்தது.


 ஜோன்கூட்டன்பேர்க் அச்சியந்திரத்தை கண்டுபிடித்ததை தொடர்ந்து பத்திரிகை, துண்டுப்பிரசுரம், புத்தகம் போன்றன அச்சடிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் அரசியல் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இதனால் அரசியல் அறிவு வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தேசிய அரசுகள் எழுச்சி பெற்றன. பொருளாதார உற்பத்தி போட்டி, நாடுகான் பயணம், வணிகவாதம், கைத்தொழில் புரட்சி முதலானவையும் தேசிய அரசின் தோற்றத்தை ஊக்கப்படுத்தியது. அதாவது வணிக ரீதியாக பொருட்களை பெறுவதிலும் தமது பொருட்களை விற்பனை செய்வதிலும் போட்டி ஏற்பட்டபோது பல நாடுகள் பிறநாடுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றன. இதனால் தேசிய அரசுகள் எழுச்சி அடைந்தன. தேசிய அரசின் தோற்றத்திற்கு ஆயுத உற்பத்தி மற்றும் நிரந்தர படைகளின் உருவாக்கம் என்பனவும், காரணமாகியது எனலாம். அதாவது நாடுகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக நாடுகள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்காக நிரந்தரப் படைகளை உருவாக்கிக் கொண்டதோடு ஆயுத ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக கடற்படை, தரைப்படை போன்றவற்றை பலப்படுத்தினர். புதியரக ஆயுதங்கள், வெடி மருந்துகள் துப்பாக்கிகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டதால் ஒவ்வொரு அரசும் பலம் பெற தொடங்கியமையும் தேசிய அரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.


                            நாடுகளில் தேசிய ரீதியாக மொழி ரீதியான சிந்தனைகள் வளர்ச்சி அடைந்தபையும் தேசிய மொழி, தேசிய மொழி பற்று ஏற்பட்டமையும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இதேவேளை இன ரீதியான ஒற்றுமை ஏற்பட்டமை, மொழி, மதம் போன்ற அடிப்படைகளிலே ஏற்பட்ட ஒற்றுமையும் நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற வழி வகுத்தன. அதுமாத்திரமல்லாது வணிகம், கைத்தொழில் போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்ததால் மத்தியதரவர்க்கம் எழுச்சி அடைந்தது. மத்திய தர வர்க்கத்தின் எழுச்சி காரணமாக மானியமுறை காலத்திலேயே செல்வாக்கு பெற்றிருந்த பிரபுக்கள் செல்வாக்கு குறைவடைந்தது. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்கள் போன்றோரின் செல்வாக்கு குறைவடைந்தமையும் மத்தியதரவர்க த்தின் எழுச்சி காரணமாக ஏற்பட்ட மாறுதல்களும் தேசிய அரசின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக அடிமை முறை வீழ்ச்சி அடைந்து அறிவு கொண்ட ஒரு சமூகம் எழுச்சி பெற்றது. அரசியல் சிந்தனைகள் மற்றும் கிரேக்க உரோம சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட நவீன அரசு பற்றிய சிந்தனைகள் எழுச்சி அடைந்தமையும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழி வகுத்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் இறைமை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

 

         எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அரசுகள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்றமையைக் காணமுடிகிறது.

Wednesday, 22 March 2023

Rome (உரோம நாகரிகம்)

Rome (உரோம நாகரிகம்)

கிரேக்க நாகரிகத்தின் சரிவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலே எழுச்சி பெற்ற நாகரிகமாக உரோம நாகரிகம் விளங்குகிறது. தற்கால இத்தாலியின் உரோம் நகரை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றதால் இது உரோமானிய நாகரிகம் என அழைக்கப்படுகிறது.

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...